மாவீரர் நாள் அன்று கோப்பாய் துயிலுமில்லம் முன் மக்களை அணிதிரழ அழைப்பு



மாவீரர்நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
கோப்பாய்
யாழ் மாவட்டம்
25-11-2018

அன்பார்ந்த தமிழ்த் தேச மக்களுக்கு!
தேசிய மாவீரர் நாள் 2018 நினைவேந்தல் நிகழ்வு அழைப்பு
தமிழ் மக்களின் உரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் தாயகத்தின் பல பகுதிகளிலும் மாவீரர்கள் மீளாத்துயில் கொள்ளும் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ் மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்த துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள இராச வீதியில் உள்ள காணி ஒன்றில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அனைத்து மாவீரர் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்த் தேச மக்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிப்பவர்கள், ஊடக நண்பர்கள், பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அணிதிரளமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
இடம்: இராச வீதி, (கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக)
திகதி: 27-11-2018 (செவ்வாய்க்கிழமை)
நேரம்: மாலை 6.05 மணி (5.00 மணிக்கு முன்னர் வருகை தரவும்)

நன்றி

இணைப்பாளர்
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
யாழ்மாவட்டம்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila