இலங்கையில் சீனாவின் கடன்பொறி - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம்!


இலங்கையில் சீனாவின் கடன் பொறி தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளது. ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொஹோஸ்லாவ்ஸ்கி இந்த ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்களை ஆராய்ந்திருந்தார்.
இலங்கையில் சீனாவின் கடன் பொறி தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளது. ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொஹோஸ்லாவ்ஸ்கி இந்த ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்களை ஆராய்ந்திருந்தார்.
இதையடுத்து, அவர், மனித உரிமைகளில் வெளிநாட்டுக் கடன்களின் தாக்கம் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வரும், 2019 மாசி – பங்குனி கூட்டத்தொடரில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
இதுகுறித்து, ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொஹோஸ்லாவ்ஸ்கியின் பேச்சாளர் ஒருவர், கொழும்பு ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு தகவல் வெளியிடுகையில், “இந்த அறிக்கை பேரவையின் அடுத்த அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதற்கு முன்னதாக, பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவின் கடன்பொறியே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிரொலிக்கவுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila