முதியவரைக் கடத்திய இராணுவத்தினர் -துரத்திப்பிடித்த இளைஞர்கள்!


வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவரை இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேர் கடத்திச் சென்ற போது,  பொதுமக்கள் துரத்திச் சென்று  அவர்களில் 4 பேரை மடக்கி பிடித்து, நையப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று  காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவரை இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேர் கடத்திச் சென்ற போது, பொதுமக்கள் துரத்திச் சென்று அவர்களில் 4 பேரை மடக்கி பிடித்து, நையப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு- கேவில், முள்ளியானை சேர்ந்த சி.நமசியாவம் என்ற 60 வயது முதியவரை கார் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் கடத்தல்கார்களை சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் துரத்திச் சென்று இயக்கச்சி பகுதியில் மடக்கி பிடித்து நையப்புடைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, கடத்தப்பட்ட முதியவர் தமக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், அதனாலேயே தாம் கடத்தியதாகவும் கடத்தல்கார்கள் கூறியுள்ளனர்.
கடத்தல்கார்கள் தொடர்பில் விசாரணை நடத்தியபோது அதில் இருவர் இயக்கச்சி இராணுவ முகாமை சேர்ந்த சிப்பாய்கள் என அடையாளம் காணப்பட்டனர். இந்தச் சம்பவதில் 3 பேர் தப்பி சென்றுள்ளனர். மிகுதி 4 பேரும் பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் கைதாகிய இரு இராணுவ சிப்பாய்களையும் கொழும்பில் இருந்து வந்த சிங்களவர் ஒருவர் அழைத்துச் சென்றே குறித்த முதியரைக் கடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila