தூக்கியடிக்கப்பட்ட விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரான விஜயலட்சுமியை மாற்றம் செய்யும்படி முன்னைய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலதடவை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இவர் வடமாகாண பிரதம செயலாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மூப்பின் அடிப்படையில் முன்னிற்கு நிற்கும் ஆளுநர் செயலாளர் இளங்கோவன் அப்பதவிக்கு நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.