அங்கயனின் தந்தை மற்றும் சகாக்களை கைது செய்ய உடனடி உத்தரவு

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயனின் தந்தையாரான இராமநாதன் மற்றும் அவரது உதவியாளரான அன்பழகன் உள்ளிட்ட 9 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த யாழ்.நீதிவான் த.சிவகுமார் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
2013ம் ஆண்டினில் நடைபெற்ற வடமாகாணசபை தேர்தலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரமுகர் தம்பிராசாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தே சுமார் 17 மாதங்களின் பின்னர் கைதிற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப்பகுதியில் வைத்து தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையும் அத்துடன் அப்போது பிரசன்னமாகியிருந்தவர்களில் பெயர் தெரியாதவர்களது புகைப்பட ஆதாரங்களையும் தம்பிராசா சமர்ப்பித்திருந்தார். எனினும் முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் எதனையும் செய்திராத காவல்துறை அத்துடன் குற்றஞ் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியும் இருக்கவில்லை.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை அவர்கள் அனைவரையும் அரசியல் தலையீடுகள் எதனையும் பொருட்படுத்தாது கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதுவரை காலமும் மஹிந்தவினது படங்களுடன் ஜொலித்த அங்கயனின் யாழ்.மாவட்ட அலுவலகம் அண்மையிலேயே மைத்திரிக்கு மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila