2 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்கும் மட்டக்களப்பு யுவதிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல்!


சிகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டுக்காக இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு யுவதிக்கு மன்னிப்பு வழங்குமாறு நீதியமைச்சரிடம் நேற்று கோரிக்கை விடுத்தார் முன்னாள் சமூகசேவைகள் அமைச்சரான பீலிக்ஸ் பெரேரா. நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். 
சிகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டுக்காக இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு யுவதிக்கு மன்னிப்பு வழங்குமாறு நீதியமைச்சரிடம் நேற்று கோரிக்கை விடுத்தார் முன்னாள் சமூகசேவைகள் அமைச்சரான பீலிக்ஸ் பெரேரா. நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

          
சிகிரிய குன்றில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டுக்காக யுவதி ஒருவருக்கு இரண்டு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தந்தை இல்லை. தாயும் இடியப்பம் விற்றே வாழ்க்கையை கொண்டு நடத்துகிறார். "சிகிரிய குன்றும் முக்கியம். எனக்கு எனது மகளும் முக்கியம்'' என அந்தத் தாய் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். விடயம் தெரியாததன் காரணமாகவே தனது மகள் அப்படி செய்தார் என்றும், அது வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறு அல்ல என்றும் அந்தத் தாய் குறிப்பிட்டுள்ளார். சில சமயங்களில் சட்டம் வீரியமாக செயற்படுகையில் கவலையளிக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. அந்தப் பிள்ளைக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila