இலங்கையில் இரகசிய முகாம் இல்லை - ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில்

இலங்கையில் இரகசிய முகாம் இல்லை - ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் :


இலங்கையில் இரகசிய முகாம் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.     இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் நடைபெறறிருந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பொதுமக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சந்திப்பு ஒன்று இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது..     இச்சந்திப்பில் மக்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டிருந்தது.

அப்போதே எவராவது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களாவென எழுப்பப்பட்ட கேள்விக்கு ரணில் அவ்வாறு ஏதுமில்லையென பதிலளித்தார்.  மேலும் இந்த சந்திப்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீள்குடியேற்ற அமைச்சர்,மகளிர் விவகார அமைச்சர்,பிரதி அமைச்சர் ,யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila