அரசியல் கைதிகள் எவரும் இல்லை என மறுக்கும் மைத்திரி

அரசியல் கைதிகள் யாரும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் தொடர்பான தகவல்களை விரைவில் வெளியிடுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கோரியிருந்தார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட கெரி, இந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்திருந்தார்.
 அதுமாத்திரமல்லாது தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரும் அரசியல் கைதிகள் தொடர்பில் அறிக்கை வெளியிடுமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலுரைத்துள்ளார்.
அரசியல் கைதிகள் மற்றும் அவர்களின் பெயர்கள் குறித்து தம்மிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila