30 வயதுடைய சிலாபம் மற்றும் உடப்பு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் 8 இலட்சம் ரூபா என்ற என்ற அடிப்படையில் சிலாபம் பகுதியை சேர்ந்த முகவர் ஒருவருக்கு பணத்தை கொடுத்து குழுவொன்றுடன் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் 2012 ஜூன் மாதத்தில் அவுஸ்திரெலியாவுக்கு சென்றிருந்த நிலையில் அங்குள்ள அதிகாரிகளினால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் திருப்பியனுப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக விமானம் மூலம் நாடு திரும்பிய இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.