சிவாஜி தலைமையினில் பேரவையினில் போராட்டம்!

poli1சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணசபையில் உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையினில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

poli2வட மாகாணசபையின் 103ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை வட மாகாணசபையின் பேரவை செயலக மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போது மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
முன்னதாக யாழ்.ஊடக அமையத்தினில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்த கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பினில் அறிவித்திருந்தார்.
இந்நிலையினில் பேரவை தலைவரது அனுமதியுடன் தன்னால் தயார் செய்து எடுத்துவரப்பட்ட சுலோக அட்டைகள் சகிதம் கே.சிவாஜிலிங்கம் போராட்டத்தினில் குதித்திருந்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila