அதிகாரத்தை சுவைக்க ஆசைப்படும் மகிந்த: மகிந்த ஆதரவு சு.க. உறுப்பினர்கள் கூட்டம் போடுகின்றனர்

அதிகாரத்தை சுவைக்க ஆசைப்படும் மகிந்த: மகிந்த ஆதரவு சு.க. உறுப்பினர்கள் கூட்டம் போடுகின்றனர்:

மீண்டும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக மகிந்த ஆதரவு சு.க உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

மகிந்தவுக்கு அதிகாரம் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதிபூண்டுள்ள உறுப்பினர்கள், இந்தக் கூட்டத்தில் சந்திக்கவுள்ளதாக சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அவ் உறுப்பினர் கூறினார்.

இவ்வாறான நிகழ்வு கட்சியின் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்தவுக்கு சுதந்திரக் கட்சியில் வேட்பாளர் இடமில்லை என ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஏதாவது ஒரு வைகயில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் மகிந்த ராஜபக்ச கடுமையான நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதேவேளை மகிந்த ஆட்சிக்கு வருவதையோ அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதையோ தடுக்க ரணில் உள்ளிட்டவர்கள் நகர்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila