பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து ஆலையை இராணுவம் அழித்துவிட்டது!


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பாதுகாக்கப்பட்டு வந்த காங்கேசன்துறை சீமெந்து ஆலையை, அங்கு ஜனாதிபதி மாளிகையை அமைப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் அழித்துவிட்டதாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் சேவை முகாமையாளர் ரியாஸ் சாலி தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையின் இயந்திரங்கள் உள்ளிட்ட 1000 மில்லியன் ரூபா சொத்துக்களை அழிப்பதற்கு அனுமதித்ததற்கு இலங்கை இராணுவமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சீமெந்து தொழிற்சாலையின் சொத்துக்கள் அழிவடைவதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் ஒரு காரணமாக இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தொழிற்சாலையின் தற்போதை நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்ததாக குறிப்பிட்ட அவர், இவ்விடயம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila