ஜனாதிபதி, பிரதமரால்தான் திலக் மாரப்பன ராஜினாமா (நவீன் திஸாநாயக்க சுட்டிக்காட்டு)


முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பன தன்விருப்பின் பேரில் அல்லாமல் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இராஜினாமா செய்து கொண்டதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹற்றன் கினிகத்தேனை பிரதே சத்தில் நேற்று முன்தினம் நடை பெற்ற நிகழ்வொன்றில் கலந்து        கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரை யாற்றுகையில்,
சர்ச்சைக்குரிய அவன்கார்ட் விவகாரத்தில் சிறைச்சாலைகள் அமைச்சராக இருந்த திலக் மாரப் பன, நல்லாட்சி அரசாங்கத்தில் பொறுப்பாக நடந்துகொண்டார் என்று கூறமுடியாது.
அமைச்சரவை அமைச்சராக இருந்துகொண்டு அவன்கார்ட் நிறு வனத்திற்கு சட்ட ஆலோசகராக கட மையாற்றிய அவரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியும், பிரதம ரும் கேட்டுக்கொண்டார்கள். இதற்க மையவே அவர் இராஜினாமா செய்துகொண்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் எந்த வொரு அமைச்சருக்கும் இதுபோன்ற நடைமுறையே பின்பற்றப்படும். எனினும் இந்த சம்பவத்தை தொடர் ந்து நல்லாட்சி அரசாங்கத்திற்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக வதந்தி கள் பரவிவருகின்றன. அவ்வா றான கருத்து வேறுபாடு அரசாங்கத் திற்குள் கிடையாது. எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே ஆட்சி வகிக்கும்.
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் எதிர் பார்க்கும் சிறந்த அனுகூலங்கள் நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்               தார்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila