தமிழ் மக்கள் பேரவையின் 2-வது கூட்டத்தொடர் நாளை


தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் நாளை 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட் போர் கூடத்தின் கீழ்த் தளத்தில் இடம் பெறும்.

பேரவையின் இணைத் தலை வர்களான வடக்கு மாகாணசபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன், த.வசந்தராஜா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத் தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட வரைபைத் தயாரிக்கும் உப குழு மற்றும் ஐ.நா மனித உரிமை கள் பேரவையின் தீர்மானங்கள் அமுலாகுவதை அவதானிக்கும் உபகுழு, கலை பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் உப குழுக்கள் என்பவற்றுக்கான நிபுணர்களின் தெரிவு இடம்பெறுவதுடன், நண்பகல் 12.00 மணிக்கு பத் திரிகையாளர் மாநாடும் நடைபெ றும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila