மகேஸ்வரனை படுகொலைசெய்த சூத்திரதாரி சபையில் இருக்கிறார்! - விஜயகலா

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலைசெய்த சூத்திரதாரி இந்தச் சபையில் இருக்கின்றார் என்று நாடாளுமன்றில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தக் கொலையைச் செய்தவர் யார் என்பதை வெளிப்படுத்தி அவரை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். இதற்காக மகேஸ்வரன் படுகொலை தொடர்பான விசாரணை மீண்டும் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தகவல் வெளியிட்டு வலியுறுத்திய அவர் மேலும் தெரிவிக்கையில்,

12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுதலைசெய்தபோது எதுவும் கூறாதவர்கள் இப்போது சிறைகளிலுள்ள  217 அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கு எதிராக பேசுகின்றனர். இந்த விடயத்தில் எதிர்க்கட்சியிலுள்ள ஒருசில இனவாதிகளுக்காக எமது தமிழ் மக்களை அரசு பணயம் வைக்கவேண்டாம்.

ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், லசந்த விக்கிரமதுங்க, நிமலராஜன் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் சரியாக முடியவில்லை. மகேஸ்வரன் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்தவர்.

அவருக்கு வழங்கப்பட்டிருந்த 15 மெய்ப்பாதுகாவலர்களையும் கடந்த கால அரசு நீக்கியது. இப்படி செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் யார்? இது குறித்து விசாரணை செய்யவேண்டும்.

மகேஸ்வரனை படுகொலைசெய்த சூத்திரதாரி இந்தச் சபையில் இருக்கிறார். அவர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். இதற்காக மகேஸ்வரன் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் இடம்பெறவேண்டும்'' என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila