கூட்டமைப்பு திருந்தாவிட்டால் மாற்று அரசியல்? ஊடகப் பேச்சாளர் சுரேஸ்!!

suresh premachanranதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் செல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மாற்று அரசியல் கட்சி உருவாக முடியும், அரசியலில் எதுவும் நடக்கலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியல்ல அது ஒரு இயக்கம். இதனை கண்டு எவரும் அச்சம் கொள்ளவோ, பதற்றம் அடையவோ தேவையில்லை. வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. இது அரசியல் கட்சியாக செயற்பட போவதில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான விழியில் செயற்பாடுகளை முன்னெடுக்காது விடின் எதிர்காலத்தில் வேறொரு பெயரில் வேறு வடிவத்தில் மாற்று அரசியல் கட்சி ஒன்று உருவாக முடியும். அரசியலில் எதுவும் நடக்கலாம். எதனையும் தற்போது உறுதியாக கூறிவிட முடியாது எனத் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு தீர்வு திட்டங்களை தயாரித்து வழங்குகின்ற போது அது தமிழ் மக்களை பலவீனப்படுத்தி விடாதா? என ஊடவியலாளர்கள் வினவிய போது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எவ்வித தீர்வுத் திட்டத்தையும் தயாரித்ததாகத் தெரியவில்லை தயாரிக்கவும் இல்லை. அப்படி அவர்கள் தயாரித்திருந்தால் அதனை ஏன் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்? எந்த மக்களுக்காக தீர்வுத்திட்டத்தை தயாரித்தார்களோ அந்த மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஏன் இதுவரை மேற்கொள்ளவில்லை? தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரிக்கிறது என்றதும் இனி அவர்களும் எதனையும் உருவாக்க முடியும். ஆனால் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு செய்ய வில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாது. மாகாண முதலமைச்சருக்கு தெரியாது. மாகாண அமைச்சர்களுக்கு தெரியாது. உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு தெரியாது. இப்படி எவருக்கும் தெரியாது எவ்வாறு ஒரு தீர்வுத்திட்டத்தை உருவாக்க முடியும்?
எனவேதான் தமிழ் மக்கள் பேரவை பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கௌரவமாகவும், ஒரே நாட்டுக்குள் சுயாட்சியுடனும் வாழக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. சில வேளை இனி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்வுத்திட்டத்தை உருவாக்கி அது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை விட சிறப்பாக இருந்தால் அதனை அவர்கள் அரசிடம் சமர்ப்பிக்கட்டும் எனவும் குறிப்பிட்டார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila