அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் ஜனாதிபதி முறை தொடரவேண்டும் (சுதந்திரக் கட்சி வலியுறுத்து)


புதிய அரசியலமைப்பில் ஜனா திபதியின் அதிகாரங்கள் குறைக் கப்படும் அதேவேளை, ஜனாதிபதி முறை தொடரவேண்டும் எனும் நிலைப்பாட்டை, ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி எடுத்துள்ளது. 
தற்போதைய அரசியலமைப் பில் 13ஆவது திருத்தத்தை அமுல் செய்வதை, கட்சி ஆதரிக்கின்றது. தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப, அதன் குறைபாடுகள் நீக்கப்பட வேண்டுமென, கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் செனவிரத்ன கூறினார். 

இது நடைபெறின், மாகாண சபைகள், கூடு தல் அதிகாரத்தை அனுபவிக்க முடியுமென வும் அவர் கூறினார். ஜனாதிபதி முறைமை இன்றி, நாட்டின் ஒருமைத் தன்மையைப் பேணுவது கடினமாகும் எனவும் அவர் கூறி னார்.
இதனால், நாட்டில் ஒருமைத் தன்மை பாதுகாப்பு, ஜனாதிபதியின் பிடி, நாடு முழுவ தும் விரவியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு தனது கட்சி ஆதரவானது என்றும் தனி யொரு ஆளில் பெருமளவு அதிகாரம் இரு ப்பதை ஏற்கமுடியாது எனவும் அவர் கூறினார். 
அரசியலமைப்பு பேரவை தொடர்பில் அரசாங்கத்தின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திரு த்தங்களை சமர்ப்பிக்கவுள்ளது. 

அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக, முழு அவையினதும் குழு ஒன்றை நியமிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகின்றது. மேலும்  இந்த குழு அரசியலமைப்பை எழுது வதற்கு பதிலாக ஓர் அறிக்கையை சமர்ப்பி க்க வேண்டும்.

இந்த அறிக்கைக்கு சபையின் மூன்றிலி ரண்டின் ஆதரவை பெற்று அமைச்சரவை புதிய அரசியலமைப்பை ஆக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை உயர் நீதிமன் றில் தீர்மானத்துக்கு அரசு அனுப்ப வேண்டும் என்று அவர் கருத்து   தெரிவித் தார்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila