பிரகீத் கடத்தல் விசாரணை - இன்னமும் தகவல்களை வழங்க மறுக்கும் இராணுவம்!

Prageeth-Ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல்போன சம்பவம் குறித்த தொடர்பான விசாரணைக்குத் தேவையான விபரங்களை இராணுவம் இன்னமும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எக்நெலிகொட காணாமல்போன சம்பவம் குறித்த விபரங்களை வெளியிடுமாறு ஹோமாகம நீதவான், அண்மையில் இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார். எனினும், விசாரணைகளுக்காக கிரித்தலே இராணுவ முகாமிற்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தேவையான ஆவணங்களை இராணுவத்தினர் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எக்நெலிகொட புலிகளுடன் தொடர்பு பேணியமைக்கான ஆடியோ ஆதாரங்கள் காணப்பட்டால் ஏன் அவரை இராணுவத்தினர் கைது செய்யவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சட்ட மா அதிபர் இந்த விடயத்தில் தலையீடு செய்யத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, விசாரணைகளை முடக்கவோ இடையூறு செய்யவோ முயற்சி எடுக்கப்படவில்லை எனவும் விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila