சம்பந்தனே பேரவையை வரவேற்றபோது இனி நாம் பாகுபாடு காட்டக் கூடாது (எதிர்ப்பதில் அர்த்தமில்லை என சிவாஜி எடுத்துரைப்பு)


தமிழ் மக்கள் பேரவை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே வர வேற்கும்போது, நாங்கள் அவர் களை இணைத்து கொள்ளலாம் அல்லது இவர்களை வெளியேற்றலாம் என பாகுபாடு காட்டக் கூடாது என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் பேரவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போது, இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கான வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டமைந்த விசேட குழுவொன்று நேற்றைய தினம் அன்கூரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முதலமைச்சர் உட்பட அரைவாசி உறுப்பினர்களது பேர்கள் குறிப்பிடப்பட்டு இருந்த போதிலும் ஆளுங்கட்சி உறுப்பினரம் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை சேர்ந்தவருமான கந்தையா சர்வேஸ்வரன் பெயர் முன்னர் குறிப்பிடப்படவில்லை. சர்வேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவில் உள்ளார் என வெளியாகிய செய்தி காரணமாக அவர் இந்தக் குழுவில் இணைக்கப்படவில்லையா? 

என்ற கேள்வியை எழுப்பிய ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அவ்வாறு வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென்பதை நேற்று செவ்வாய்க்கிழமை கைதடியில் நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் கூறினார். மேலும் தமிழ் மக்கலுக்கான தீர்வினை யார் வேண்டுமானாலும் தயாரித்து எம்மிடம் தர முடியும், அவற்றை பரிசீலிப்பதற்கு தாம் தயாராக உள்ளதாக சம்பந்தன் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையையும் அவர் வரவேற்றுள்ளார். ஆகையால் நாங்கள் யாரையும் புறந்தள்ளுவதில் அர்த்தமில்லை என சிவாஜிலிங்கம் தெரிவித்தார். எனினும், மேற்படி குழுவில் சர்வேஸ்வரன் சேர்த்துக்கொள்ளப்படுவார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித் தார். அதற்கிணங்க சர்வேஸ் வரனும் 19 ஆவது நபராக சேர்த் துக் கொள்ளப்பட்டார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila