உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு உத்தரவு!

ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்குகளைமுடக்குவதற்கு அனுமதி தருமாறு நிதி மோசடி விசாரணை பிரிவினர் கொழும்பு பிராதானநீதிமன்றில் விண்ணப்பம் ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.
2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் விமானக் கொள்வனவில் இடம்பெற்றமோசடி தொடர்பிலேயே நிதி மோசடி விசாரணை பிரிவினர் உதயங்க வீரதுங்கவின்வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
நிதி மோசடி விசாரணை பிரிவினரின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில்,உதயங்க வீரதுங்கவிற்கு இலங்கையில் உள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும்முடக்குமாறு கொழும்பு பிராதான நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் 2006 முதல் 2015 வரையில் உதயங்க வீரதுங்கரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila