வடமாகாண சபையையும் மக்களையும் பிரித்தெடுக்கும் சதியில் மத்திய அரசு!


மத்­திய அரசு எம்முடன் பேசு­வது போல் காட்­டிக்­கொண்டு திட்­ட­மிட்­ட­வாறு தங்­க­ளது நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்­கி­றது. வடமாகாண சபையையும் மக்களையும் பிரித்தெடுக்கும் செயற்பாட்டை மேற்கொள்கிறது என வட மாகாண விவ­சாய அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் தெரி­வித்தார்.

வட மாகாண சபை மூன்று தினங்கள் விவ­சாய கண்­காட்­சியை மன்னார் உயி­லங்­குளம் விவ­சாய பயிற்சி நிலை­யத்தில் நடத்­தி­ய­போது இதன் ஆரம்ப நாளன்று நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

மத்­திய அர­சா­னது எங்­க­ளு­டைய எந்­த­வி­த­மான ஆலோ­ச­னை­யி­னையும் பெறாமல் இரண்டு மூன்று தினங்­க­ளுக்கு முன்பு அர­சாங்­கத்­தினால் விரைவில் வடக்கில் இறப்பர் பயிர்ச்­செய்கை மேற்­கொள்­ளப்­படும் என்று செய்தி அறிக்­கைகள் விடப்­பட்­டுள்­ளது.

எனவே எங்­களை பொறுத்­த­வ­ரையில் மாகாண சபை என்று ஒன்று இங்கு இருக்­கின்­றது. எங்­க­ளி­டமும் தகு­தி­வாய்ந்த திற­மை­மிக்க ஆய்­வா­ளர்கள் இருக்­கி­றார்கள்.

எங்­களை புறந்­தள்ளி தாங்­க­ளா­கவே சில செயற் திட்­டங்­களில் ஈடு­பட்டு அதற்கு பின்னால் வரப்­போகும் பாத­க­மான விளை­வு­களை எல்லாம் எங்கள் தலையில் கட்­டி­விடும் ஒரு அபா­ய­க­ர­மான சூழ்­நி­லையில் தான் இந்த வடக்கு மாகாணம் இருக்­கின்­றது என்­பதை எடுத்துக் காட்­டவே மத்­திய அரசு திட்­ட­மிட்டு செயல்­ப­டு­கின்­றது.

மக்­க­ளிடம் மிருந்து எங்­களை அன்­னி­யப்­ப­டுத்­து­வ­தற்கு திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு ஒரு உதா­ர­ணத்தை குறிப்­பி­டு­வது இங்கு பொருத்­த­மாக இருக்கும் என நான் நினைக்­கின்றேன்.

அண்­மையில் முத­ல­மைச்­ச­ரு­டைய தலை­மையில் பிர­தமரை சந்­தித்­தி­ருந்தோம். அந்த சந்­தர்ப்­பத்தில் வடக்கு, கிழக்கில் அறு­பத்­தை­யா­யிரம் வீடுகள் கட்­டப்­ப­டு­வது தொடர்­பாக மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ரினால் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது. எங்­க­ளது தரப்பில் இருக்­கக்­கூ­டிய சில அதி­ருப்­தி­களை இந்த வீட்­டுத்­திட்டம் தொடர்­பாக எமது முத­ல­மைச்­ச­ரினால் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

அப்­போது ஒரு இணக்கம் எட்­டப்­பட்­டது. எங்­க­ளு­டைய அனு­ம­தி­யில்­லா­மையே இரண்டு வீடுகள் கட்­டப்­பட்ட நிலையில் அந்த வீடு­களை நாங்கள் பார்த்து அதற்கு பிறகு முடி­வெ­டுக்­கலாம் என்று ஒரு கருத்­து­நிலை எட்­டப்­பட்­டது.

ஆனால் மூன்­றா­வது வீடும் எங்­க­ளுக்கு தெரி­யாமல் கட்­டப்­ப­டு­வ­தற்­கான வேலைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த வீட்­டிற்­கான கட்­டு­மான பொருட்­களை பெற்­று­கொண்­டவர் என்­னிடம் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

ஆகவே உப்­புக்கு சப்­பாக எங்­க­ளுடன் பேசு­வது போல் ஊருக்கு காட்­டிக்­கொண்டு தாங்கள் திட்­ட­மிட்­ட­வாறு தங்­க­ளது நட­வ­டிக்­கை­யினை இந்த அர­சாங்கம் மேற்­கொள்­கி­றது என்­றுதான் நான் கரு­து­கின்றேன்.

உண்­மையில் மக்­க­ளுக்­கான பிர­தி­நி­திகள் நாங்கள், மக்­க­ளி­னு­டைய கொள்கை சார்ந்த முடி­வு­க­ளையும் நாடு­த­ழு­விய அல்­லது மாகாணம் தழு­விய முடி­வு­களை எடுப்­ப­தற்கும் தான் எங்­க­ளுக்­கான முத­ல­மைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இருக்­கி­றார்கள்.

மத்­திய அர­சாங்­கத்­தி­னு­டைய ஒரு திட்டம் தொடர்­பாக நாங்கள் முறைப்­பாடு செய்­கின்ற போது நீங்கள் எங்­க­ளுக்கு தேவை­யில்லை நாங்கள் மக்­க­ளிடம் சென்று மக்­களின் அபிப்­பி­ரா­யத்தின் பேரில் நாங்கள் செய்­கின்றோம் என்று சொல்லி தமிழ் தின­ச­ரி­க­ளிலும் கவர்ச்­சி­க­ர­மான இந்த வீட்டுத் திட்­டத்தை படம் போட்டு மக்­களின் அபிப்­பி­ராயம் கோரப்­ப­டு­கி­றது. இதானல் நாங்கள் உதா­சீ­னப்­ப­டுத்­தப்­ப­டு­கின்றோம் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila