யாழ்ப்பாணத்தில் 118 இடங்களில் காணிகளைக் கோரும் முப்படைகள்!

 

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் உட்பட 118 இடங்களில்  காணிகள் தேவைப்படுவதாக முப்படையினரும் கோரியுள்ளதாக நில அளவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. க தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 03 காணிகளும் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 21 காணிகளும் வேலணை மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 16 காணிகளும் ஊர்காவற்துறை, சங்கானை கோப்பாய், ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளிலும் தலா 08 காணிகளும் கோரப்பட்டுள்ளன.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் உட்பட 118 இடங்களில் காணிகள் தேவைப்படுவதாக முப்படையினரும் கோரியுள்ளதாக நில அளவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. க தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 03 காணிகளும் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 21 காணிகளும் வேலணை மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 16 காணிகளும் ஊர்காவற்துறை, சங்கானை கோப்பாய், ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளிலும் தலா 08 காணிகளும் கோரப்பட்டுள்ளன.

அத்துடன், நெடுந்தீவு, நல்லூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலா 06 காணிகளும் காரைநகரில் 05 காணிகளும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 03 காணிகளும் கரவெட்டி, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 02 காணிகளும், சண்டிலிப்பாயில் 09 காணிகளும் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 01 காணியும் தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மும்படையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள காணிகள், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும் அளக்க முற்பட்ட போதிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலையீடுகளினால் தடுத்து நிறுத்தப்பட்டன. எனினும் மீண்டும் நில அளவைகள் திணைக்களத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila