கேகாலை அரநாயக்காவில் மீண்டும் மண்சரிவு: ஆதவனின் சிறப்புச் செய்தியாளர் (இரண்டாம் இணைப்பு)

கேகாலை, அரநாயக்கவில் இன்று (சனிக்கிழமை) மற்றுமொரு மண்சரிவு இடம்பெற்றுள்ள நிலையில், மண்சரிவினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என ஆதவனின் சிறப்புச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
கேகாலை, அரநாயக்க – கபரகல மலை உச்சியில் இன்று மாலை இந்த மண்சரிவு ஏற்பட்டதுடன், இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்ற, ஆதவனின் சிறப்புச் செய்தியாளர் அனர்த்தம் குறித்து தொலைபேசி ஊடாக தகவல் வழங்கினார்.
இதன்போது, மணசரிவுடன், கற்பாறைகள் விழுந்துள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையாக அங்கிருந்து அகற்பப்பட்டமையினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
கேகாலை, அரநாயக்கவில் மற்றுமொரு மண்சரிவு! 
கேகாலை, அரநாயக்கவில் மற்றுமொரு மண்சரிவு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
கேகாலை, அரநாயக்க – கபரகல மலை உச்சியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து இதுவரையில் தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், மேலதிக தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
மண்சரிவு ஏற்பட்டமைத் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியான போதிலும், உறுதியாக எதனையும் கூறமுடியாதுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 18 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதுடன், 144 பேர் வரையில் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
13227261_930215857076352_528054355637954935_o 13240477_930243730406898_6044686360073932389_n 13241362_930243690406902_8201536241236451798_n 13245233_930215883743016_2745801232444527415_n
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila