யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

4cc04e34-3f25-4024-9662-334cf31efb28
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்காலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று(புதன்கிழமை) யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் விரிவுரையாளர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என அதிகளவானவர்கள் கலந்து கொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.



1c89d3ae-110d-49da-a147-b4567e75fd9e 4cc04e34-3f25-4024-9662-334cf31efb28 8a0cf891-5f6e-4e56-a592-9a03a606a439 8cdda285-957c-4817-b0b2-d932aa56e1e8 16fac2a8-143a-414d-a2d9-f2452f477c81 23b6394b-e889-419f-bd56-ba49241c4fca 69e0e581-018f-4fbe-9efe-b159a6d73ec4 c50871f7-232c-4bb2-a70f-f7dbf15e2fc5
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila