குறி வைக்கப்படும் தமிழரின் தனித்துவம்


வடக்கு மாகாண ஆளு­ந­ராகப் பொறுப்­பேற்ற நாளிலிருந்து இனக்­க­லப்பு விவ­கா­ரத்­துக்கு முக்­கி­யத்­துவம் அளித்து வரு­கிறார் ரெஜினோல்ட் குரே.வடக்கு மாகாண ஆளு­ந­ராக ரெஜினோல்ட் குரே நிய­மிக்­கப்­பட்ட போது, அர­சியல் மட்­டத்தில் அவர் பற்­றிய பெரி­ய­ள­வி­லான எதிர்­பார்ப்­புகள் காணப்­பட்­டன. ஆனாலும், அவர் பத­வி­யேற்பு நிகழ்வில் வெளி­யிட்ட கருத்­துக்கள் தமிழ் மக்­களை முகம்­சு­ழிக்க வைத்­தி­ருந்­தன.

சாதி, சமயம், இனம் என்ற தனித்­துவம் பாராமல், கலப்பு திரு­ம­ணங்­களை மேற்­கொள்­வதன் மூல­மாக நாட்டில் உண்­மை­யான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த முடியும் என்று அவர் அப்­போது கூறி­யி­ருந்தார். அவ­ரது அந்தக் கருத்து, தமிழ் மக்கள் மத்­தியில், புதிய அச்­சத்தைத் தோற்­று­வித்­ததும் உண்மை.

இது­வரை காலமும் தமிழ் மக்கள் இனப்­ப­டு­கொலை, இன­ அ­ழிப்­பு­களைத்தான் எதிர்­கொண்டு வந்­தனர். ஆனால், இனக்­க­லப்பின் ஊடாக, இனச்­சுத்­தி­க­ரிப்பு அபாயம் ஒன்­றுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்­பட்டு விடுமோ என்ற பர­வ­லான அச்சம், ஆளு­நரின் கருத்­தினால் தமிழ் மக்­க­ளிடம் ஏற்­பட்­டி­ருந்­தது. இனக்­க­லப்பு திரு­ம­ணங்கள் பற்­றிய வட மாகாண ஆளு­நரின் கருத்­துக்கள், அவர் பற்­றிய எதிர்­பார்ப்­பு­களை ஆரம்­பத்­தி­லேயே நொறுக்கி விட்­டி­ருந்­தன.

இப்­போது அவர், வடக்கில் எல்லா இன மாண­வர்­களும் கற்கும் பாட­சா­லை­களை உரு­வாக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார். வன்­னியில், சிவில் பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற நிகழ்வு ஒன்­றி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

வடக்கில் எல்லா இன மாண­வர்­களும் கற்கும் பாட­சா­லை­களை உரு­வாக்கும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் உள்ள பிரச்­சி­னை­களை அறி­யாமல் அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்­டி­ருப்பார் என்று கரு­து­வ­தற்­கில்லை.

நாட்டின் ஏனைய பகு­தி­களைப் போன்று வடக்கு மாகாணம் ஒன்றும், மூவின மக்­களும் பர­வ­லாகச் செறிந்து வாழும் பகுதி அல்ல. வடக்கின் பெரும்­பா­லான பகு­தியில் தமிழ் மக்கள் தான் வசிக்­கின்­றனர்.

தமிழ், முஸ்லிம் மாண­வர்கள் இங்கு ஒன்­றா­கவே கல்வி கற்­கின்ற நிலை சில இடங்­களில் காணப்­பட்­டாலும், சிங்­கள மாண­வர்கள் இணைந்து கற்கும் நிலை இல்லை. குறைந்­த­ளவு சிங்­கள மாண­வர்­களே வடக்கில் இருப்­ப­தாலும் மொழிப்­பி­ரச்­சினை கார­ண­மா­கவும், அவ்­வா­றான சூழ­லுக்கு வாய்ப்­பி­ருக்­க­வில்லை.

இந்த நிலையில், வடக்கில் மூவின மாண­வர்­களும் கல்வி கற்கும் பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற ஆளு­நரின் நிலைப்­பாடு, வடக்கில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை ஊக்­கு­விக்கும் ஒரு விட­ய­மா­கவே தென்­ப­டு­கி­றது.

ஏற்­க­னவே இனக்­க­லப்புத் திரு­ம­ணங்கள் பற்­றிய கருத்தை வெளி­யிட்­டவர் என்ற வகை­யிலும், கொழும்பில் தமி­ழர்கள் வீடு­களை வாங்கி குடி­யே­று­வது போன்று, வடக்­கிலும் சிங்­க­ள­வர்கள் குடி­யே­று­வதில் தவ­றில்லை என்று கூறி­யவர் என்ற வகை­யிலும், இந்த விட­யத்­திலும் ஆளு­நரின் கருத்­துக்­களை சாதா­ர­ண­மாக எடுத்துக்கொள்ள முடி­யாது.

வடக்கில், மூவின மாண­வர்­களும் கற்கும் பாட­சா­லை­களை உரு­வாக்க வேண்­டு­மானால், மூவின மக்­களும் ஒரே பகு­தியில் செறிந்து வாழும் நிலையை உரு­வாக்க வேண்டும். இதன் அர்த்தம் வடக்கின் தமி­ழர்­களின் செறிவைக் குறைப்­ப­தே­யாகும்.

வடக்கில் மூவி­னங்­களும் செறிந்து வாழும் நிலையை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம், தமி­ழரின் தனித்­து­வ­மான பிர­தேசம், தாயகப் பிர­தேசம் என்ற கோட்­பாட்டை சிதைக்க அர­சாங்கம் முனை­கி­றதா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. வடக்கும் கிழக்கும் தமி­ழர்­களின் தாயகப் பகு­தி­க­ளாக இருந்­தன. ஆனால் இன்று சிங்­களக் குடி­யேற்­றங்­களின் மூலம் கிழக்கில் தமி­ழர்­களின் தனித்­துவம் பறிக்­கப்­பட்டு, அவர்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக்­கப்­பட்­டுள்­ளனர். அது­மட்­டு­மன்றி, தமி­ழர்கள் நிலங்கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன.

திரு­கோ­ண­ம­லையில், தமி­ழர்கள் தமக்குச் சொந்­த­மான வயல்­களில் விவ­சாயம் செய்­வ­தற்கு பொலிஸ் பாது­காப்பைப் பெற வேண்­டிய அள­வுக்கு சிங்­களக் குடி­யேற்­றங்கள் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கின்­றன. மூவின மக்­களும் செறிந்து வாழு­கின்ற போதிலும், கிழக்கில் தமி­ழர்­களின் நிலங்­களும், உரி­மை­களும் தான் பறிக்­கப்­பட்டு நசுக்­கப்­ப­டு­கின்­றன.

அது­போன்­ற­தொரு நிலையை வடக்­கிலும் உரு­வாக்­கு­வ­தற்­கா­கவே, தமி­ழரின் தனித்­து­வத்தைச் சிதைப்­ப­தற்­கா­கவே சிங்­களக் குடி­யேற்­றங்கள், இனக்­க­லப்புத் திரு­ம­ணங்கள் என்ற புதிய வடி­வங்­களில் ஆக்­கி­ர­மிப்­புகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இனப்­பி­ரச்­சி­னைக்கு தமி­ழர்கள் எதிர்­பார்க்­கின்ற தீர்வை வழங்­கு­வ­தற்குப் பதி­லாக, வேறொரு வடி­வத்தில் தீர்வைத் திணிக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது.

அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யான ஆளுநர் அந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் செயற்­ப­டுவார் என்­பதில் சந்­தே­க­மில்லை.தமது பாரம்­ப­ரிய தாயகப் பிர­தே­ச­மான வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­பட்ட, தம்மைத் தாமே ஆளு­கின்ற உரி­மையைக் கொண்­ட­தான ஒரு தீர்­வையே தமி­ழர்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.இது தமி­ழர்­களின் தனித்­து­வத்தை தொடர்ந்து நிலைத்­தி­ருக்க வைக்கும் என்­பதும், அவர்­களின் அடை­யா­ளத்தை அழி­யாமல் பாது­காக்கும் என்­ப­தையும் அர­சாங்­கமும், சிங்­கள அர­சியல் தலை­மை­களும் நன்­றா­கவே அறியும்.

எனவே தான், தமி­ழர்­களின் தனித்­து­வத்தை ஏற்றுக் கொள்­ளாத வகையில், அதற்கு அங்­கீ­கா­ரத்தை அளிக்­காத வகையில், தீர்வு ஒன்றைத் திணிக்க முனை­கி­றது அர­சாங்கம்.நல்­லி­ணக்க செயற்­றிட்டம் என்ற போர்­வையில், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களைப் பலப்­ப­டுத்தும் திட்டம் என்ற போர்­வையில், தமி­ழர்­க­ளுக்­கான தனித்­து­வ­மான தீர்வு ஒன்றை வழங்­கு­வதைத் தட்­டிக்­க­ழிப்­பதே அர­சாங்­கத்தின் திட்டம்.

தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை ஏற்­காமல், தனித்­து­வத்தை அங்­கீ­க­ரிக்­காமல் பிரச்­சி­னையைத் தீர்ப்­பதே அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகத் தெரி­கி­றது. அதற்­கேற்­ற­வாறு தான், வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே செயற்­பட்டு வரு­கிறார். இனக்­க­லப்பு, கலப்புப் பாட­சா­லைகள், போன்ற அவ­ரது திட்­டங்­களின் ஊடாக தமி­ழர்­களின் தனித்­து­வத்தை கெடுப்­ப­தற்கே முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது.

ஒரு இனத்தின் தூய்­மையைக் கெடுப்­பதை இனச்­சுத்­தி­க­ரிப்பு என்­கி­றது ஐ.நாவின் பிர­க­டனம். ஒவ்­வொரு இனத்­துக்கும், மொழிக்கும் தனித்­துவம் இருக்­கி­றது. அதனை உலகம் அங்­கீ­க­ரித்­தி­ருக்­கி­றது.அழியும் நிலையிலுள்ள இனங்­க­ளையும், மொழி­க­ளையும் காப்­பாற்ற உல­க­ளா­விய முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.ஆனால், வடக்கில்தான், ஒரு இனத்தின் தனித்­து­வத்­தையும், மொழியின் தனித்துவத்தையும் அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தற்போதைய ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கும், சிங்களக் குடியேற்றங்கள், இராணுவக் குடியிருப்புகள் இந்த தனித்துவத்தை அழிக்கும் இலக்கை முன்வைத்தே செயற்படுத்தப்படுகின்றன.வடக்கில் தமிழரின் தனித்துவத்தை அழிப்பதன் மூலம், இனக்கலப்பை உருவாக்குவதன் மூலம் நல்லிணக்கத்தை, அமைதியை ஏற்படுத்தி விடலாம் என்று அரசாங்கம் செயற்படுமேயானால், அது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

தமிழ் மாணவர்கள் தமது தனித்துவமான கல்வியும், மொழியும் நசுக்கப்பட்ட போது தான், ஆயுதமேந்தத் தலைப்பட்டார்கள் என்ற வரலாற்றை அவர்கள் அவ்வளவு இலகுவாக மறந்துவிடக்கூடாது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila