இலங்கை » மஹிந்தவின் மாளிகையை பெறுவதற்கான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம் (2ஆம் இணைப்பு)
காங்கேசன்துறையில் கடந்த ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சகல வசதிகளும் பொருந்திய கட்டிடத்தை, வட மாகாண சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தால் குறித்த பிரேரணையை இன்று வட மாகாணசபையில் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. மஹிந்தவின் சொகுசு மாளிகை விவகாரம் : வட மாகாண சபையில் இன்று பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட சகல வசதிகளும் பொருந்திய கட்டத்தை, வட மாகாண சபைக்கு கையளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் பிரேரணை, இன்று வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வட மாகாண சபையின் 54ஆவது அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபை அலுவலகத்தில், அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்விலேயே குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையின் வதிவிட முகாமைத்துவ பயிற்சிநெறிகளை நடத்துவதற்கும், வடக்கிற்கு வரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தங்குவதற்கும், மாநாடுகளை நடத்துவதற்கும் பொருத்தமான கட்டிட வசதிகள் எதுவும் இல்லாத நிலையை கருத்திற்கொண்டு, அதனை வட மாகாண சபைக்கு வழங்கவேண்டுமென ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்து, அவைத் தலைவரால் இப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அண்மையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும், வட மாகாண அவைத்தலைவர் இக்கோரிக்கையை வடக்கு முதல்வரிடம் முன்வைத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதியின் சிறப்புரிமை தொடர்பான பிரேரணைகள் மற்றும் அ.ஆர்னல்டின் வேலையில்லா பிரச்சினை தொடர்பான பிரேரணைகளும் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post:
Add Comments