சாலாவ இராணுவ முகாமிற்குள் பிரவேசிக்க புலனாய்வுப் பிரிவினருக்கு தடை

salawa-camp

கொழும்பின் புறகர் பகுதியான கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடுத்து குறித்த முகாமிற்குள் புலனாய்வுப் பிரிவினர் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலாவ இராணுவ முகாமிற்குள் இருந்த ஆயுதக்களஞ்சியத்தில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, 47 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தால் ஐயாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் குறித்த பிரதேசத்தை விட்டு வெளியியேறியுள்ளன.
இந்த பிரதேசத்தில் உள்ள கட்டடங்கள், பொதுமக்களின் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சம்பவம் இடம்பெற்ற இடத்தை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேரில்சென்று பார்வையிட்டார்.
எனினும் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்க நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும் சம்வம் இடம்பெற்றமை தொடர்பான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila