வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தற் குழுவினை சந்தித்த அமைச்சர் த. குருகுலராஜா மற்றும் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா ஆகியோரினால் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது.
மேலும், இந்த சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது,
ஓர் இனம் மற்றைய இனத்தை ஆதிக்கம் செலுத்தவோ, கீழ்ப்படிய வைக்கவோ முடியாத வகையில் அரசியலமைப்பு மாற்றம் அமைய வேண்டும் என்பதனைக் கருத்திற் கொண்டே மாகாண சபையின் வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இறைமை பகிரப்பட்ட, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலான சமஸ்டி முறையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யுமென்றும் எடுத்துக் கூறப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் இரு சிங்கள உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய 36 உறுப்பினர்களாலும் முன்மொழிவினை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதெனவும் சுட்டிக்காட்டினர்.
எனவே, வடக்கு மாகாண மக்களின் ஏகோபித்த கருத்தை அரசு கருத்திலெடுத்து உறுதியான புதிய அரசியலமைப்பு மாற்றத்தினைக் கொண்டு வரவேண்டுமென்று கோரிக்கையினையும் த. குருகுலராஜா, சி. தவராசா ஆகியோர் முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.