பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் - பெரும்பாண்மை வாக்குகள்


பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க வேண்டும் என இன்று முதலமைச்சர் அலுவலகத்தில், வடமாகாண செயலாளர் தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாண்மை வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இன்று திங்கள் கிழமை முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண செயலாளர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கே பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வேண்டும் என மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பதினெட்டு பேரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் வாக்களித்துள்ளார்கள்.
தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வேண்டும் என மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளடங்கலாக மூன்று பேரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு பெரும் வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila