விடுதலைப்போராட்டத்தில் நேர்மையாக நடந்துகொண்ட விடுதலைப்புலிகள்!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது விடுதலைப்புலிகள் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடுவில் இடம்பெற்று வரும் நல்லிணக்க பொறிமுறைக்கான செயலனியில் கலந்து கொண்ட முன்னாள் போராளிகள் மற்றும் உறவுகளை இழந்தவர்கள் இந்த விடயத்தினை கூறியுள்ளனர்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தக்குற்றம் குறித்து தற்போதைய அரசு முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணை மீதும் துளியளவும் நம்பிக்கை இல்லை.
அத்துடன், வடமாகாணத்துக்குரிய முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மிகவும் நேர்மையாகவே நடந்து கொண்டனர். தடை செய்யப்பட்ட எந்த ஆயுதத்தையும் அவர்கள் பயன்படுத்தவில்லை.



இலங்கை இராணுவம் தமிழர்களை படுகொலை செய்தது போல், விடுதலைப்புலிகள் சிங்கள மக்களை தாக்க முற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்.
வடமாகாணத்தில் வறுமை காரணமாக பெண்கள் பல்வேறு கலாசார சீர்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே, அவர்களை வறுமையில் இருந்தும் கலாசார சீர்கேட்டில் இருந்தும் மீட்க அனைவரும் முன்வர வேண்டும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila