மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்


வடமராட்சி கிழக்கு குடத்தனை   விளாங்காட்டுப்பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினையிழந்த மோட்டார் சைக்கிள் வீதியோர முட்கம்பி வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலி யானதுடன் இன்னொருவர் படுகாயமடைந்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. பருத்தித்துறை மருதங்கேணி வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் மோட்டார்  சைக்கிளில் பயணித்த அம்பன் குடத்தனையைச் சேர்ந்தவர்களான ஜெயராசா பிரதாஸ் (வயது 22) நாதகிருஷ்ணன் மகிந்தன் (வயது 23) ஆகிய இருவருமே படுகாயங்களிற்குள்ளான நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அன்புலன்ஸ் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் ஜெயராசா பிரதாஸ் என்பவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மற்றைய நபர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila