தென்னிலங்கை மக்கள் சமஷ்டி என்ற சொல்லுக்கும் வட பகுதி மக்கள் ஒற்றையாட்சி என்ற சொல்லுக்கும் அச்சமடைகின்றனரென எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அதிகாரப் பகிர்வாக்கல் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது தனது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
த ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த தேர்தலின் போது தமக்கு வாக்களித்த 90 வீதமான தமிழ் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.அவர்களின் பிரச்சினையை தீர்ப்பது எனது பொறுப்பு மாத் திரமல்ல எனது கடமையும் கூட என்று ஜனாதிபதி மைத்திரி தெரிவித்தார்.
இந்த நிலையில் நல்லிணக்கம் என்பது சில நாட்களில் செய்யக்கூடிய ஒன்றல்ல என்றும் ஜனாதிபதி தெரி வித்துள்ளார்.அரசாங்கத்தை பொறுத்த வரையில் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வுக்கு பெருமுயற்சியை மேற்கொள்கிறது.
ஐக்கிய தேசியக்கட்சியுடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வது தொடர்பில் தமக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி க்குள் அழுத்தங்கள் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தாம் பதவியேற்ற பின்னர் இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள ஜனா திபதி, இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகள் மற்றும் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள 9000 பில்லியன் கடன்பளு என்பனவற்றை தீர்க்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் பதவியை இழந்தவர்கள் தமது நடவடிக்கைகளை, குழப்ப முனைவதாக குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி நாற்பது வருட அரசியல் அனுபவத்தை கொண்டுள்ளதன் அடிப்படையில் தாம் எந்தவொரு சவாலையும் சமாளித்து வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியான பின்னர் 11 தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு தாம் விஜயம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், முன்னர் இருந்த ஜனாதிபதிகள் எவரும் அவ்வாறு செல்லவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கை பொறுத்தவரையில் 90 வீதமான தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே அவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியது எனது கடமையாகும்.
தான் பதவிக்கு வந்த போது நாட்டின் சட்டம் பலவீனமாக இருந்தது. எனவே தான் பிரதம நீதியரசராக சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவரை நியமித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சிறுபான்மையினர் மத்தியில் இலங்கையின் நீதிமுறை தொடர்பாக நம்பிக்கையை கட்டியெழுப்புவது இதன் நோக்காகும்.
சமஷ்டி என்ற சொல் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பாதகமானதாக பார்க்கப்படுகிறது. வடக்கு மக்களை பொறுத்தவரை ஒற்றையாட்சி என்ற சொல் அபாயமானதாக கருதப்படுகிறது.
எனவே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது உடன்பாடு ஒன்றுக்கு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவை யற்ற வாதங்களை விடுத்து விரைவில் தீர்வு ஒன்றை ஏற்படுத்த முயல்வதாக ஜனா திபதி தெரிவித்துள்ளார்.மகிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், புதிய ஒரு அரசியல் சக்தி உருவாவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்திய - இலங்கை எட்கா உடன்படிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர், எந்த நாட்டுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் அது செயற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவும் சீனாவும் இலங்கையின் நெருங்கிய நண்பர்கள் என்றும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.