ஐ.நாவை கேலிக்கூத்தாக மாற்றும் அரசாங்கம்

UNGenera4-26a86b8db1ae8a284e3e65e19960671655f9fd60.jpg

ஜெனீவாவில் நடந்து வரும், சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான ஐ.நா. குழுவின் 59 ஆவது கூட்­டத்­தொ­டரில் கடந்த வாரம் இலங்கை தொடர்­பான மீளாய்வு இடம்­பெற்­றி­ருந்­தது.
நவம்பர் 15, 16ஆம் திக­தி­களில் நடந்த இந்த மீளாய்வுக் கூட்­டத்­துக்கு, இலங்­கையில் இருந்து 11 பேர் கொண்ட குழு, சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய தலை­மையில் ஜெனீவா சென்­றி­ருந்­தது.
கடந்த ஆண்டு செப்­டெம்பர் மாதம், இலங்கை தொடர்­பான இணக்கத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட – ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­ட­ருக்குப் பின்னர், இலங்கை அர­சாங்கம் அதிக பிர­தி­நி­தி­களை ஜெனீ­வா­வுக்கு அனுப்­பி­யது இதுவே முதல்­முறை.
ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா என்­பது குறித்த, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்ட கூட்­டத்­தொ­ட­ருக்குக் கூட, இலங்­கையிலிருந்து இந்­த­ளவு பிர­தி­நி­திகள் ஜெனீவா சென்­றி­ருக்­க­வில்லை.
ஆனால், சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான ஐ.நா. குழுவின் கூட்­டத்­தொ­டரில் அர­சாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்­டி­யி­ருந்­தது.
ஏனென்றால், இது தனியே போருடன் தொடர்­பு­டைய விவ­காரம் மாத்­தி­ர­மல்ல. போருக்குப் பிந்­திய தற்­போ­தைய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள், விமர்­ச­னங்­க­ளுக்கும் பதி­ல­ளிக்க வேண்­டிய ஒரு கூட்­டத்­தொ­ட­ராக இருந்­தது.
இலங்­கையில் சித்­தி­ர­வ­தைகள், கைதுகள், ஆட்­க­டத்­தல்கள், பாலியல் துன்­பு­றுத்­தல்கள் என்­பன போன்ற மனித உரிமை மீறல்கள் குறித்து மீளாய்வு செய்யும் கூட்­டத்­தொடர் இது.
இந்த மீறல்கள் தொடர்­பாக அர­சாங்­கத்தின் கட்­ட­மைப்பில் உள்ள இரா­ணுவம், பொலிஸ் மற்றும் ஏனைய தரப்­புகள் மீது பெரும்­பா­லான குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.
இப்­ப­டிப்­பட்ட நிலையில், இத்­த­கைய குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள் குறித்து விளக்­க­ம­ளிக்க வேண்­டிய கடப்­பாடு அர­சாங்­கத்­துக்கு இருந்­தது. இன்னும் எடுக்­கப்­ப­ட­வுள்ள நட­வ­டிக்­கைகள் குறித்த வாக்­கு­று­தி­களை அளிக்க வேண்­டிய கட­மையும் அர­சாங்­கத்­துக்கு இருந்­தது.
அதை­விட, மீறல்கள் விட­யத்தில் அர­சாங்கம் பாரா­மு­க­மாக இருக்­கி­றது. மீறல்­களை கண்­டு­கொள்­வ­தில்லை, மீறல்கள் தொடர்­கின்­றன என்­பது போன்ற குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்­வ­தற்கு தற்­போ­தைய அர­சாங்கம் விரும்­ப­வில்லை.
ஏனென்றால், அடுத்த ஆண்டு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை அர­சாங்­கத்­துக்கு மற்­றொரு சவால் காத்­தி­ருக்­கி­றது. அதை­விட, சர்­வ­தேச சமூ­கத்­துடன் நெருக்­க­மான உற­வு­களை ஏற்­ப­டுத்தி வரும் சூழலில், இத்­த­கைய குற்­றச்­சாட்­டுகள் அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்தும் என்றும் அர­சாங்கம் கரு­து­கி­றது.
எவ்­வா­றா­யினும், குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் என்­ன­வென்­பது பற்­றிய அறிக்­கை­களை சமர்ப்­பித்து, ஐ.நா. நிபுணர் குழு­வுக்கு விளக்­க­ம­ளிக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் சர்­வ­தேச கடப்­பா­டாகும்.
அந்த வகையில், ஜெனீ­வாவில் கடந்த வாரம் நடந்த கூட்­டத்­தொ­ட­ருக்கு இலங்கை அர­சாங்கம் முக்­கி­யத்­துவம் கொடுத்து அதி­க­ளவு பிர­தி­நி­தி­களை அனுப்­பி­யி­ருந்­தமை ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரிய விட­ய­மல்ல.
இந்தக் கூட்­டத்தில் பங்­கேற்ற இலங்கைக் குழு­வினர், சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான ஐ.நா. குழுவின் கடு­மை­யான கேள்­வி­க­ளுக்கு முகம் கொடுக்க நேரிட்­டது.
சாட்டுப் போக்குச் சொல்லித் தப்­பித்துக் கொள்ளும் வகையில் இது இருக்­க­வில்லை.
ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இது­போன்ற குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­படும் போது, நழு­வ­லாகப் பதி­ல­ளித்து விட்டு நகர்ந்து போகும் அர­சாங்கப் பிர­தி­நி­தி­க­ளுக்கு, கடந்­த­வார ஜெனீவா அமர்வு அத்­த­கை­ய­தாக இருக்­க­வில்லை.
சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான ஐ.நா. நிபு­ணர்கள், அர­சாங்கப் பிர­தி­நி­தி­க­ளிடம் குறுக்­குக்­கேள்­வி­களை எழுப்­பினர். அறிக்­கை­களில் உள்ள குறை­பா­டுகள், தவ­று­களை சுட்­டிக்­காட்­டினர். அறிக்­கைகள் விளக்கம் போதாமல் இருப்­பது குறித்து கேள்­வி­களை எழுப்­பினர்.
அவ்­வாறு எழுப்­பப்­பட்ட கேள்­விகள் ஒன்றும் மறை­மு­க­மா­ன­தாக இருக்­க­வில்லை. அப்­பட்­ட­மாக, சம்­ப­வங்­களை முன்­னி­றுத்தி எழுப்­பப்­பட்ட இந்தக் கேள்­விகள், இலங்கை அரச பிர­தி­நி­தி­க­ளுக்கு நிச்­சயம் சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.
நீதி­மன்­றத்தில் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து சட்­டத்­த­ரணி ஒருவர் எவ்­வாறு கேள்­வி­களை எழுப்­பு­வாரோ அத்­த­கைய பாணியில் தான், இந்த இரண்டு நாள் அமர்வு இடம்­பெற்­றி­ருந்­தது.
இந்த அமர்­வுக்கு, இலங்கை அர­சாங்­கத்­தினால் அனுப்பி வைக்­கப்­பட்ட குழுவில், இருந்­த­வர்­களில் தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ரான சிசிர மென்­டிஸும் அடங்­கி­யி­ருந்தார். இது பலத்த சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
காரணம், சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வ­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட ஒருவர், எவ்­வாறு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான ஐ.நா. கூட்­டத்­தொ­டரில் ஒரு அரச பிர­தி­நி­தி­யாகப் பங்­கேற்க முடியும் என்­பதே, மனித உரிமை அமைப்­பு­க­ளி­னது முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.
2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம், 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை­யான காலப்­ப­குதி இலங்­கையில் மனித உரிமை மீறல்­களும், போர்க்­குற்­றங்­களும் உச்சம் பெற்­றி­ருந்த கால­மாகும். இந்தக் கால­கட்­டத்தில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவு ஆகி­ய­வற்­றுக்கு பொறுப்­பாக இருந்த சிசிர மென்டிஸ் எவ்­வாறு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான ஐ.நா. கூட்­டத்­தொ­டரில் பங்­கேற்க முடியும் என்று ஆர்.எஸ்.எவ். எனப்­படும் எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லாளர் அமைப்பும், ஜே.டி.எஸ். எனப்­படும், இலங்­கையில் ஜன­நா­ய­கத்­துக்­கான ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பும் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தன.
இந்தக் கால­கட்­டத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கைது செய்­யப்­பட்­டமை, கடத்­தப்­பட்­டமை, சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை என்­பன போன்ற மீறல்­களில் தொடர்­பு­டை­யவர் என்று குற்­றச்­சாட்­டுக்கு இலக்­கா­ன­வரை இலங்கை அர­சாங்கம் தனது குழுவில் இடம்­பெறச் செய்­ததை இந்த ஊடக அமைப்­புகள் கண்­டித்­தி­ருந்­தன.
இந்தக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக, சிசிர மென்­டி­சிடம், ஐ.நா. நிபு­ணர்கள் விசா­ரணை நடத்த வேண்டும் என்றும் இந்த அமைப்­புகள் கோரி­யி­ருந்­தன.
அதே­வேளை, ஐ.நா. விசா­ரணைக் குழு ஒன்றின் அறிக்­கையில், சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­யவர் என்று பெய­ரி­டப்­பட்­டி­ருந்­த­வரை, ஐ.நாவுக்­கான கூட்­டத்­தொ­ட­ருக்கு அர­சாங்கம் தனது பிர­தி­நி­தி­யாக அனுப்­பி­யது, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும், ஐ.நாவையும் அவ­ம­திக்கும் செயல் என்று கூறி­யி­ருந்தார், ஐ.நா. முன்னாள் நிபு­ணரும், மனித உரிமை அமைப்பு ஒன்றின் தலை­வ­ரு­மான யஸ்மின் சூகா.
2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணை அறிக்­கையில், குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு தலை­மை­ய­கத்தில் விசா­ர­ணை­களை நடத்தும் சித்­தி­ர­வதை அறைகள் இருந்­த­தாக கூறப்­பட்­டி­ருந்­தது.
சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான கூட்­டத்­தொடர் ஒன்­றுக்கு சித்­தி­ர­வ­தை­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் என்று குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வரை அனுப்­பு­வது அபத்­த­மான விடயம் என்­பது அர­சாங்­கத்­துக்கு தெரி­யாத விட­ய­மாக இருந்­தி­ருக்­காது.
ஆனாலும், சர்­வ­தேச ஆத­ரவு தமக்கு இருக்­கி­றது என்ற மெத்­த­னப்­போக்கே அர­சாங்­கத்தின் இந்த முடி­வுக்கு கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம்.
மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம், சர்­வ­தேச சமூ­கத்­தையும், ஐ.நாவையும் இது போன்ற விட­யங்­களில் எவ்­வாறு கையாண்­டதோ அதே அணு­கு­மு­றையைத் தான் தற்­போ­தைய அர­சாங்­கமும் கடைப்­பி­டிக்­கி­றது.
இறு­திக்­கட்டப் போரில் போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்டார் என்று மனித உரிமை அமைப்­பு­களால் குற்­றம்­சாட்­டப்­பட்ட, மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்­வாவை, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் 2010ஆம் ஆண்டு ஐ.நாவுக்­கான துணைத் தூதுவர் பத­வியில் அமர்த்­தி­யது, மூன்று ஆண்­டு­க­ளுக்கு மேலாக அவர் அந்தப் பத­வியில் இருந்தார்.
இலங்­கையின் போர்க்­குற்­றங்கள் குறித்த விசா­ர­ணைகள் தொடர்­பான முயற்­சி­களை மேற்­கொண்ட, ஐ.நாவின் அமர்­வு­களில், அத்­த­கைய குற்­றங்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­யவர் என்று நம்­பப்­பட்­ட­வரே இலங்­கையின் பிர­தி­நி­தி­யாக பங்­கேற்றார்.
இது­கு­றித்து சர்­வ­தேச ரீதி­யாக பலத்த எதிர்ப்­புகள் எழுந்த போதிலும், கடைசி வரையில் இலங்கை அர­சாங்கம் தனது நிலைப்­பாட்டை மாற்றிக் கொள்­ள­வில்லை.
அது அர­சாங்­கத்தின் ஒரு வகை தந்­தி­ர­மாக இருந்­தது.
அண்­மையில் இரா­ணுவப் புல­னாய்வுப் பணிப்­பாளர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்ட பிரி­கே­டியர் சுரேஷ் சாலியும் கூட, நியூ­யோர்க்கில் உள்ள ஐ.நாவுக்­கான இலங்கைத் துத­ர­கத்தில் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
இரா­ணுவப் புல­னாய்­வுத்­துறை பல்­வேறு மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக இலங்கை நீதி­மன்­றங்­களில் வழக்­குகள் நடந்து கொண்­டி­ருக்கும் போது, அதற்குப் பொறுப்பாக இருந்தவர், ஐ.நாவுக்கான தூதரகத்தில் உயர் பதவியில் அமர வைக்கப்படவுள்ளார்.
ஐ.நாவை ஒரு விளையாட்டு மைதானமாக இலங்கை அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகத்தைத் தான் இது ஏற்படுத்துகிறது.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒரு பேட்டியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், அதிகாரிகள் மாறவில்லை. அதனால், மாற்றங்களை செய்ய முடியாதிருப்பதாக கூறியிருந்தார்.
ஐ.நா. விடயத்தில் அதிகாரிகள் மாத்திரம் முடிவுகளை எடுத்திருப்பார்கள் என்று கூற முடியாது. அரசாங்கமும், இதற்குப் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்.
ஐ.நா. போன்ற பொறுப்புவாய்ந்த சபைகளை, அரசாங்கம் எந்தவுக்கு மதிக்கிறது என்பதை, இதுபோன்ற விடயங்களில் இருந்தே அறிந்து கொள்ள முடியும்.
கசாப்புக்கடை வைத்திருப்பவரை தர்மஉபதேசத்துக்கு அனுப்புவது எந்தவகையில் பொருத்தமற்றதோ, அதுபோலத் தான், முன்னைய, இப்போதைய அரசாங்கங்களினது செயல்களும் உள்ளன.
ஆட்சி மாற்றம் என்பது, அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறையில் எந்த வித்தியாசத்தையும் வெளிப்படுத்தவில்லை.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila