அரசியலமைப்பில் மாற்றமில்லை; ஐரோ.ஒன்றியப் பிரதிநிதிகளிடம் வடக்கு முதல்வர்!

wik

புதிய அரசியலமைப்பில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாத நிலையில், பழைய நிலமையிலேயே இன்னும் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமை கொண்ட 17 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இந்த சந்திப்பு குறித்து கூறிய முதலமைச்சர்,
இலங்கையின் தற்போதைய நிலை எவ்வாறு அமைந்துள்ளதென்பது பற்றியும், தமது ஈடுபாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பிலும் ஆராயவதற்காக வருகை தந்துள்ளனர்.
அரசியல் ரீதியாகவும், சமூகம் சார்ந்தும் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். முழுமையாக எமக்கு உரித்துக்கள் தரப்படாத நிலையிலும், அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படாத நிலையிலும் உள்ளோம் என்று அவர்களிடம் கூறினேன்.
புதிய அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவராத நிலையில் பழைய நிலையிலேயே தரித்து நிற்கின்றோம். அவை தவிர்க்கப்பட வேண்டியதுடன், பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் அராசங்கத்துடன் பேசுவதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிகள் உறுதியளித்துள்ளனர் என முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.wik
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila