கொழும்பில் மாற்று திறனாளிகளுக்கு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் தொர்ந்தும் தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சரை பார்த்து முழு நாடும் இன்று பிரம்மித்து போயிருக்கின்றது. கடந்த காலத்தில் அவரை பார்த்து கேலி செய்தவர்கள் எல்லாம் இப்பொழுது வாயடைத்து போயுள்ளனர்.
காரணம் விக்னேஸ்வரன் தனது மாகாண சபையில் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட போது தயக்கமின்றி விசாரணை குழுவை அமைத்து அறிக்கை பெற்று அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார் என மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.