காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தலைவியிடம் விசாரணை!


கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தலைவி க.ஜெயவனிதாவிடம் புலனாய்வுத்துறையினர் இன்று விசாரணைக்கு நடத்தினர். மேற்படி 
 சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 100 நாட்களை கடந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தலைவி க.ஜெயவனிதாவிடம் புலனாய்வுத்துறையினர் இன்று விசாரணைக்கு நடத்தினர். மேற்படி சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 100 நாட்களை கடந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
           
இந்த நிலையில், சங்கத்தின் தலைவியான ஜெயவனிதாவின் காணாமல் போன மகள், ஜனாதிபதியுடன் நிற்பது போன்ற ஒளிப்படம் சர்வதேச ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவ்வாறான பின்னணியிலேயே அந்த சங்கத்தின் தலைவி புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் க.ஜெயவனிதா கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதியுடன் எனது மகள் நிற்பது போன்ற ஒளிப்படம் தொடர்பாகவும் அவர் கற்கும் காலப்பகுதியில் கல்வி சுற்றுலா சென்றமை உட்பட, காணாமல் ஆக்கப்பட்ட எனது மகள் தொடர்பான சகல விபரங்களையும் புலனாய்வுத்துறையினர் பெற்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila