ஜூலைக் கலவரத்தில் 7 பேர் தான் கொல்லப்பட்டனர் என்பது நகைப்புக் கிடமானது! - முதலமைச்சர்


1983ஆம் ஆண்டு, ஜுலை கலவரத்தில், 7 பேர் தான் உயிரிழந்தார்கள் என்று கூறுவது தவறு என்றும் என்ன நடந்தது என்பது சகலருக்கும் தெரியும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று 
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, ஜூலைக் கலவரத்தில், 7 பேர் தான் உயிரிழந்ததாக அரசாங்கத் தரப்பினர்கள் கூறியுள்ளமை குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

1983ஆம் ஆண்டு, ஜுலை கலவரத்தில், 7 பேர் தான் உயிரிழந்தார்கள் என்று கூறுவது தவறு என்றும் என்ன நடந்தது என்பது சகலருக்கும் தெரியும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, ஜூலைக் கலவரத்தில், 7 பேர் தான் உயிரிழந்ததாக அரசாங்கத் தரப்பினர்கள் கூறியுள்ளமை குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
       
“கடந்த 1983ஆம் ஆண்டு, ஜூலைக் கலவரம் நடைபெற்ற காலப்பகுதியில், நான் கொழும்பில் தான் இருந்தேன். எனக்குத் தெரிந்தவர்கள் கூட, காருடன் சேர்த்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அவ்வாறு, அந்தக் காலப் பகுதியில் நடந்த சம்பவங்கள் எல்லோருக்கும் தெரியும். அவ்வாறிருக்கையில், ஏழு பேர் தான் இறந்தார்கள் என்று கூறினால், சிரிப்பார்கள். இதனை யார், எதற்காகச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனாலும், அவ்வாறு ஏழு பேர் என்று கூறுவது தவறு. அந்தக் கலவரம் குறித்து எத்தனையோ நூல்களும் வந்துள்ளன.
இந்நிலையில், அந்தக் கலவரம் குறித்து அமைக்கப்பட்டக் குழுக்கள் குறித்தும் முதலமைச்சரிடம் வினவியபோது,“இலங்கையில் அப்படித் தான் ஒவ்வொன்றுக்கும் குழுக்கள் அமைக்கப்படும். ஆனால், அந்தக் குழுக்களது கருத்துகள் நடைமுறைப்படுத்தவோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்பட மாட்டாது. இது தானே, எங்களுடைய சரித்திரம்” என்று, இதன்போது முதலமைச்சர் கூறினார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila