சீனா வைக்கும் பொறி (சமகாலப் பார்வை)

china

இலங்­கையில் சீனாவின் முத­லீ­டு­க­ளுக்கு எதி­ராக உள்­ளூரில் நடத்­தப்­படும் போராட்­டங்­க­ளை­யிட்டு சீனா கவலை கொள்­ள­வில்லை என்று, சீன தூதுவர் யி ஷியான்­லியாங் முன்­பொரு தடவை கூறி­யி­ருந்தார். அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா வின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்­துக்கு, குத்­த­கைக்கு வழங்கும், உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­ப­டு­வ­தற்கு கடு­மை­யான எதிர்ப்­புகள் தெரி­விக்­கப்­பட்டு ஆர்ப்­பாட்டப் பேர­ணிகள் நடத்­தப்­பட்ட பின்­னரே அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதி­ர­ணி­யி­னரின் எதிர்ப்­பையும் கூட சீனத் தூதுவர் பெரிய விட­ய­மாக அப்­போது எடுத்துக் கொண்­டி­ருக்­க­வில்லை.
உள்­நாட்டில் தெரி­விக்­கப்­படும் எதிர்ப்­பு­க­ளினால், இலங்­கையில் சீனாவின் முத­லீ­டுகள் பாதிக்­கப்­ப­டாது என்­பதே அவ­ரது கருத்­தாக அப்­போது இருந்­தது.
ஆனால், அதே சீனத் தூதுவர் தான் கடந்­த­ வாரம், இலங்கை மக்­க­ளுக்கு ஓர் அழைப் பை விடுத்தார். “இலங்­கைக்கு அபி­வி­ருத்தி முக்­கி­ய­மா­னது. நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அர­சாங்­கத்­துடன் மக்கள் ஒத்­து­ழைக்க வேண்டும்” என்­பதே அவ­ரது கோரிக்கை.
இந்தக் கோரிக்­கையை அவர் விடுத்­தி­ ருந்த சூழல், இடம் என்­பன அவர் எத னைக் கூற வரு­கிறார் என்­பதை புலப்­ப­டுத்­தி­யி­ருக்கும். தங்­கா­லையில், 1000 மாண­வர்­க­ளுக்கு சீனா­வினால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட 1.8 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான கல்வி உப­க­ர­ணங்­களைக் கைய­ளிக்கும் நிகழ்வில் உரை­யாற்­றிய போது தான், அவர் இதனைக் கூறி­யி­ருந்தார்.
தங்­காலை மஹிந்த ராஜபக் ஷவின் கார் ல்டன் இல்லம் அமைந்­தி­ருக்­கின்ற இடம் மாத்­தி­ரமல்ல, அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­பாட்­டுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டப் பேர­ணிகள் நடத்­தப்­பட்ட இடமும் கூட.
அந்தப் பின்­ன­ணியில் இருந்து பார்க்­கும்­போது, சீனத் தூதுவர் நாட்டை அபி­வி­ருத்தி செய்ய மக்கள் ஒத்­து­ழைக்க வேண் டும் என்று விடுத்த கோரிக்­கையின் உண்­மை­யான நோக்கம் புலப்­பட்­டி­ருக்கும்.
இந்த நிகழ்வில் சீனத் தூதுவர் வெளி­யிட்­டுள்ள சில தக­வல் கள், அம்­பாந்­தோட்­டையை உள்­ள­டக்­கிய, தென்­மா­கா­ணத் தின் மீது, சீனா கொண்­டி­ருக்­கின்ற அதீத அக்­க­றை­யையும், இலங் கை மீதுள்ள அதன் கரி­ச­னை­க­ளையும் புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளது.
சீனாவின் ஷங்காய் நக­ரத்தைப் போன்று, தென்­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு, சீனா தொடர்ந்து உத­வி­களைச் செய்யும்.
அடுத்த 15 ஆண்­டு­களில் சிங்­கப்­பூரின் நிலைக்கு இலங்­கையைத் தர­மு­யர்த்­து­வ­தற்கு சீனா தொடர்ந்து உத­வி­களை வழங்கும் என்ற இர ண்டு அறி­விப்­பு­க­ளையும் சீனத் தூதுவர் வெளி­யிட்­டி­ருக்­கிறார்.
சிங்­கப்­பூரின் சிற்பி என்று அழைக்­கப்­படும், அந்த நாட்டின் முன்னாள் பிர­தமர், லி குவான் யூ இலங்­கைக்கு வந்­தி­ருந்த போது, இலங்­கையைப் போல சிங்­கப்­பூரை மாற்­றுவேன் என்று கூறி­யி­ருந்தார்.
அந்­த­ள­வுக்கு இலங்கை அப்­போது முன்­னேற்­ற­ம­டைந்­தி­ருந்­தது. தன்னைப் பார் த்து மற்ற நாடுகள் பொறா­மைப்­படும் அள ­வுக்கு சிங்­கப்பூர், இன்று வளர்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கி­றது.
இதனால் தான், கடந்த பல ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூரைப் போல இலங்­கையை மாற்­றுவோம் என்று இங்­குள்ள அர­சி­யல்­வா­திகள் பலரும் கூறி வரு­கின்­றனர்.
இப்­போது ஒரு வித்­தி­யா­ச­மாக, சீனத் தூது­வரும் அத­னையே கூறத் தொடங்­கி­ யி­ருக்­கிறார். இலங்­கையில் சீனாவின் பொரு­ளா­தார முத­லீ­டு­களும் தலை­யீ­டு­களும் அதி­க­ரிக்கத் தொடங்கி 10 ஆண்­டு­க­ளுக்கு மேலாகி விட்­டது. ஆனால், இலங்­கையை சிங்­கப்­­பூரை நோக்கி கொண்டு செல்­வ­தற்குப் பதி­லாக, சோமா­லி­யாவைப் போல பின்­நோக்கி இழுத்துச் சென்­றது தான் மிச்சம்.
இலங்­கையைக் கடன்­பொ­றிக்குள் சிக்க வைத்து, நாட்டின் வளங்­களை வெளி­நா­டு­ க­ளுக்கு குத்­த­கைக்குக் கொடுக்க வேண்­ டிய நிலையில் கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருப்­பது சீனா தான்.
இதே சீனா தான், இன்னும் 15 ஆண்­டு­ க­ளுக்குள், இலங்­கையை சிங்­கப்­பூ­ராக மாற்­று­வ­தற்கு உத­வுவோம் என்று கூறி­யி­ருக்­கி­றது. இதனை எப்­படி சீனா சாதிக்கப் போகி­றது? சிங்­கப்­பூ­ராக மாற்­று­வ­தற்­கான அத்­தனை உத­வி­க­ளையும் சீனா வழங்கும் என்றால், அதன் அர்த்தம், எவ்­வ ­ளவு கட­னையும் தரத் தயா­ராக இருக்­கி றோம் என்­பது தான். இது தான், சீனா வைக்­கின்ற பொறி.
இதே பொறியை சீனா இப்­போது ஆபி­ரிக்க நாடு­களை நோக்­கியும் வைக்கத் தொடங்­கி­யி­ருப்­ப­தாக சர்­வ­தேச ஊட­கங்­களில் கார­சா­ர­மான விவா­தங்கள் நடக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.
மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் இருந்த போது, சீனாவைப் பற்றிக் கேள்வி எழுப்­பினால் மிகப் பெரு­மை­யாக ஒரு விட­யத்தை குறிப்­பி­டுவார்.
“இலங்­கையின் மிகச்­சி­றந்த நண்பன், மற்ற நாடு­களும், சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­களும் கடன்­க­ளையோ உத­வி­க­ளையோ கேட்டால், நிபந்­த­னை­களை விதிப்­பார்கள். மனித உரிமை மீறல்­களை சுட்­டிக்­காட்டி எச்­ச­ரிப்­பார்கள்.
இவை எது­பற்­றியும் கேள்­வியே எழுப்­பாமல், சீனா நிதியை அள்ளித் தரு­வதால் தான் அவர்­க­ளிடம் போகிறோம்” என்று அவர் அடிக்­கடி கூறி­வந்தார்.
எவ்­வ­ளவு கட­னையும், எந்த நிபந்­த­னை­க­ளுக்கும் உட்­ப­டுத்­தாமல் தரத் தயா­ராக இருக்­கிறோம் என்ற சீனாவின் உத்­த­ர­வாதம் தான் பெரும்­பா­லான நேரங்­களில் இலங்கை போன்ற வளரும் நாடு­களை படு­கு­ழிக்குள் தள்ளி விடு­கி­றது.
இலங்­கைக்கு உத­வு­வ­தற்­காக எந்தக் கேள்­வியும் இல்­லாமல் கடன்­களை அள்ளிக் கொடுத்த சீனா தான், அதி­க­வட்­டியை கேட்டு நச்­ச­ரித்­ததும், அதனைக் குறைக்க முடி­யாது என்று அடம் பிடித்­ததும் வர­லாறு.
சீனாவின் கடன்கள் தான், அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை, மத்­தள விமான நிலை­யத்தை குத்­த­கைக்கு வழங்க வேண்­டிய நிலைக்கு அர­சாங்­கத்தை தள்ளிச் சென்­றுள்­ளது.
இதே சீனா தான், இப்­போது அடுத்த 15 ஆண்­டு­க­ளுக்குள் சிங்­கப்­பூ­ராக இலங்­கையை மாற்­று­வ­தற்கு உதவத் தயார் என்று கூறு­கி­றது என்றால், அது சற்று யோசிக்க வேண்­டிய விடயம் தான்.
இந்தத் திட்­டங்கள் வெற்­றி­ய­ளிக்க வேண்­டு­மென்றால் இங்­குள்ள மக்­களின் ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் அவ­சியம் தேவை. அது இல்­லை­யென்றால், சீனாவின் எந்தத் திட்­டங்­களும் பல­ன­ளிக்­காது.
இதனால் தான், அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்கு மக்கள் ஒத்­து­ழைக்க வேண்டும் என்று ஒரு போடு போட்­டி­ருக்­கிறார் சீனத் தூதுவர்.
சீனாவில் ஷங்காய் ஒரு முக்­கி­ய­மான வணிக மையம். சீனாவின் கிழக்கு கடற்­ப­ரப்பை அண்­டி­யுள்ள ஓர் உலக நிதி மையம். போக்­கு­வ­ரத்து கேந்­திரம். உலகின் மிகப் பர­ப­ரப்­பான கொள்­கலன் துறை­முகம்.
ஆண்­டுக்கு 17,125 டொலர், நபர் ஒரு­வரின் தலா வரு­மா­னத்தைக் கொண்ட ஒரு வளர்ச்­சி­ய­டைந்த நகரம் தான் ஷங்காய்.
இலங்­கையின் தென்­ப­கு­தியை ஷங்காய் நகரைப் போல மாற்­று­வ­தற்கு உத­வுவோம் என்ற சீனத் தூது­வரின் உறுதி மொழிக்குக் காரணம் இருக்­கி­றது.
அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் அதனை அண்­டிய நிலப்­ப­கு­தியை சீனா அப­க­ரிக்கப் பார்க்­கி­றது என்ற கருத்து தென் மாகா­ணத்தில் உள்ள சிங்­கள மக்­க­ளிடம் இருக்­கி­றது. அத்­த­கைய கருத்தை உரு­வாக்­கு­வதில் மஹிந்த ராஜபக் ஷ ஆத­ரவு சக்­தி­களின் பங்கு கணி­ச­மா­னது.
அம்­பாந்­தோட்டை துறை­முகம், மத்­தள விமான நிலையம், சூரி­ய­வெவ கிரிக்கெட் மைதானம் எல்­லா­வற்­றையும் கட்டும் போது, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம், அம்­பாந்­தோட்டை உலகின் சொர்க்­க­பு­ரி­யாக மாறப் போகி­றது என்று தான் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருந்­தது.
ஆனால், போகப் போகத் தான் அவை வெறும் மாயை என்­பது மக்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தது. அந்த அதி­ருப்தி இன்­னமும் தென்­ப­குதி மக்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.
அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா பெற்றுக் கொள்­வதால், தமது அன்­றாட வாழ்வு, பழக்க வழக்­கங்கள், மர­புகள், கலா­சா­ரங்கள் மாறி விடுமோ, என்ற அச்சம் சிங்­கள மக்­க­ளிடம் இருக்­கி­றது. தமது காணிகள் பறிக்­கப்­பட்டு விடுமோ என்ற அச்­சமும் இருக்­கி­றது. அதனால் அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து வரு­கின்­றனர்.
இந்த எதிர்ப்பை போக்­கு­வதில் சீனா முக்­கிய கவனம் செலுத்த ஆரம்­பித்­துள்­ளது. சலு­கைகள் மற்றும் சாத்­தி­ய­மான திட்­டங்­களின் மூலம், மக்­களின் எதிர்ப்பைத் தணிக்க முற்­ப­டு­கி­றது சீனா.
உதா­ர­ணத்­துக்கு, தங்­காலை கூட்­டத்தில் சீனத் தூதுவர் குறிப்­பிட்ட இன்னும் இரண்டு விட­யங்கள் இருக்­கின்­றன. ஒன்று தற்­போது இலங்­கையில் இருந்து 1300 மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் புல­மைப்­ப­ரி­சிலை சீனா 2000 ஆக அதி­க­ரிக்­க­வுள்­ளது. இது இளம் சமூ­கத்­தையும், மாண­வர்­க­ளையும், வசப்­ப­டுத்­து­கின்ற ஒரு முயற்சி.
அதேபோலவே, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை தென்மாகாணத்தில் இலங்கை அரசுடன் இணைந்து சீனா நிறுவப் போகிறது என்பது இரண்டாவது விடயம்.
கல்விக்கான மிகப் பெரிய வாய்ப்புகளை சீனா திறந்து விடப் போகிறது என்றவுடன், அம்பாந்தோட்டை துறைமுகம் யாரிடம் இருக்கிறது என்பது பலருக்கு மறந்து விடும் என்று சீனா கணக்குப் போடுகிறது.
தெற்கில் உள்ள மக்களை அமைதிப்படுத்தி, தனக்கு எதிரான சிக்கல்கள் எழும்பாமல் பார்த்துக் கொள்வது தான் சீனாவின் உத்தி.
இலங்கையில் சீனாவின் முதலீடுகள் அனைத்துமே பொருளாதார நோக்கம் கொண்டதல்ல. இதில் கணிசமான மூலோபாய நோக்கங்களும் இருப்பதால், அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, நல்லவனாக – கொடையாளியாக, நடிக்க வேண்டிய தேவையும் சீனாவுக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
– ஹரிகரன் –
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila