குடும்ப வாழ்வை பாதிப்படையச் செய்கின்ற நுண்கடனிலிருந்து எங்கள் பிரதேச பெண்களை பாதுகாக்க வேண்டும் என கிளிநொச்சி முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பினர் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு வந்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நேற்று கிளிநொச்சியில் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் பிரதேச சிவில் அமைப்புகளின் பிரதிநிதிக ளையும் பெண்கள் அமைப்புகளின் பிரதி நிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய போதே பெண்கள் அமைப்பினர் இக்கோரிக் கையை விடுத்துள்ளனர்.
நுண்கடன் நிறுவனங்கள் இலகுவான முறையில் அதிக வட்டிக்கு நுண்கடன்களை மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள் குறிப்பாக அதிகமாக பெண்களை இலக்கு வைத்தே இந்த நுண்கடன்கள் வழங்கப் படுகிறது.
இதன் பின்னர் கடனை அறவிட வருகின்ற நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் அநாகரிகமான வார்த்தை பிரயோக ங்களை மேற்கொள்வதோடு, அலுவலக நேரங்களுக்கு பின்னரும் சில இடங்களில் இரவு நேரங்களிலும் கடன் அறவீட்டுக்கு வருகின்றார்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்கின்றனர். வறுமை அதிகமாக காணப்படும் பிரதேசமாகவும் இந்த மாவட்டங்கள் காணப்படுகிறது எனவே இங்கு மக்களிடம் இலகுவாக கடன்களை வழங்க கூடிய சூழ்நிலைகளே காணப்படு கிறது.
இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் நிதி நிறுவனங்கள் மக்களிடம் அதிக வட்டிக்கு வாரந்த கடன், மாதாந்த கடன் என வழங்கி வருகின்றார்கள் எனவும் பெண்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும் அரச மற்றும் வணிக வங்கிகளில் கடன்களுக்கு காணப்படுகின்ற இறுக்கமான நடைமுறைகளும் நுண்கடன் நிறுவனங்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் மத்திய வங்கியின் ஆளுநருக்கு சுட்டிக் காட்டப்பட்டதோடு,
இந்த நுண் கடன் முறைக்கு மத்திய வங்கி யும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வங்கி களை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய வங்கி இவர்களை கட்டுப்படுத்த தவறியது தொடர்பி லும் மத்திய வங்கியின் ஆளுநரின் கவனத் ;திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நிதி நிறுவனங்களின் நுண்கடன் ஒரு கொள்ளை கடன். இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.