வடமாகாண பண்ணைகளை அரசை பொறுப்பேற்க தமிழரசு அழைப்பு!

shanthi_sriskandarasa_
வடக்கில் சர்ச்சைக்குரிய வகையில் இலங்கைப்படைகளின் சிவில் பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்படும் பண்ணைகளி;ல் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதுடன் தொழிற்சட்டங்களும் மீறப்படுவதாக கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் பின்னராக புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் வடக்கில் சிவில் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டனர்.
csd2அத்துடன் அவர்கள் சிவில் பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்படுகின்ற விவசாயப்பண்ணைகளில் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டும் வருகின்றனர். இவற்றில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ,அங்கவீனர்களானவர்கள், பெண்கள் பலர் வேலை செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான பண்ணைகளில் பெண்கள் மீது துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான பண்ணைகளில் சம்பளம் ஊழியர் சேமலாபநிதியம் போன்ற விடயங்களில் அநீதிகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இவ்வாறான விவசாயப்பண்ணைகளை அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
csdஎனினும் குறித்த பண்ணைகள் வடமாகாணசபைக்கு சொந்தமானவை.அவ்வகையில் அவற்றினை விடுவிக்கவேண்டுமென மாகாணசபை கோரியுள்ளது.இந்நிலையினில் சாந்தி சிறீஸ்கந்தராசாவோ அரசை பொறுப்பேற்க அழைத்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila