வித்தியா கொலையில் பொலிஸ் முக்கியஸ்தருக்கு பகிரங்க பிடியாணை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் தலைமறைவாகவுள்ள உபபொலிஸ் பரிசோதகரை கைது செய்ய பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முக்கிய சந்தேகநபரும், சம்பவம் இடம்பெற்றவேளை யாழ்.பொலிஸ் பிரிவில் உபபொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி தற்போது தலைமறைவாகவுள்ள சிறீகஜன் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையை நீதவான் பிறப்பித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்பான சகல ஆணவங்களையும் அடையாளத்துக்கு உட்படுத்தி, அவர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முடியாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினருக்கும் அந்த உத்தரவை அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கில் முன்னதாகவே கைதாகி தற்போது பிணையில் உள்ள வடமாகாண முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க மன்றில் முன்னிலையாகி இருந்தார்
இதன்போது அரச சட்டத்தரணி நிசாந்த, இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணை அறிக்கையை இன்று மன்றில் சமர்ப்பித்ததுடன் அது தொடர்பான சட்டமா அதிபரின் விளக்கத்தினையும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து குறித்த வழக்கு வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila