தமிழரசுக் கட்சி - ரெலோ முறுகலைத் தீர்க்கும் முயற்சியில் ஆயர் இல்லம்!



மன்­னார் நக­ர­சபை ஆசனப் பங்கீடு தொடர்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும், ரெலோ­வுக்­கும் இடை­யில் நில­வும் சர்ச்­சைக்கு மன்­னார் ஆயர் இல்­லம் ஊடா­கத் தீர்வு காண்­ப­தற்கு முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. கூட்­ட­மைப்­பின் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் மன்­னார் நகர சபை ரெலோ­வுக்கு ஒதுக்­கப்­பட்­டது. அது தொடர்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மன்­னார் ஆத­ர­வா­ளர்­கள் கடும் அதி­ருப்­தி­ய­டைந்­த­னர்.
மன்­னார் நக­ர­சபை ஆசனப் பங்கீடு தொடர்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும், ரெலோ­வுக்­கும் இடை­யில் நில­வும் சர்ச்­சைக்கு மன்­னார் ஆயர் இல்­லம் ஊடா­கத் தீர்வு காண்­ப­தற்கு முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. கூட்­ட­மைப்­பின் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் மன்­னார் நகர சபை ரெலோ­வுக்கு ஒதுக்­கப்­பட்­டது. அது தொடர்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மன்­னார் ஆத­ர­வா­ளர்­கள் கடும் அதி­ருப்­தி­ய­டைந்­த­னர்.

இத­னை­ய­டுத்து மன்­னார் நகர சபை­யின் ஆட்­சிக் காலத்­தில் முதல் இரண்டு ஆண்­டு­கள் தமிழ் அர­சுக் கட்­சி­யும், அடுத்த இரு ஆண்­டு­கள் ரெலோ­வும் என்ற அடிப்­ப­டை­யில் இணக்­கம் காணப்­பட்­ட­தா­கத் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வா­றா­ன­தொரு இணக்­கம் எட்­டப்­ப­ட­வில்லை என்று ரெலோ திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்து வரு­கின்­றது. இது தொடர்­பில் மன்­னார் மாவட்ட இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­ன­ருக்­கும், ரெலோ­வி­ன­ருக்­கும் இடை­யில் பேச்சு இடம்­பெற்­றது. இதி­லும் இணக்­கம் காணப்­ப­ட­வில்லை.
இதன் பின்­னர், மன்­னார் நகர சபைக்கு ரெலோ அமைப்­பி­னால் தயா­ரிக்­கப்­பட்ட வேட்­பு­ம­னு­வில் உள்­ள­டக்­கப்­பட்ட ஒரு­வரை நீக்­கு­மாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­னர் கோரிக்கை விடுத்­த­னர். அதற்கு ரெலோ இணங்­க­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது. இதனை அடுத்து இரு தரப்­பி­ன­ருக்­கும் இடை­யில் முறு­கல் முற்­றி­யி­ருக்­கி­றது. இதே நிலை தொடர்ந்­தால் மன்­னா­ரில் தமிழ் அர­சுக் கட்சி தேர்­தல் பணி­க­ளில் இருந்து முற்­றாக ஒதுங்­கி­யி­ருக்­கும், எந்­வொரு வேலை­யி­லும் கட்சி ஆத­ர­வா­ளர்­கள் ஈடு­ப­ட­மாட்­டார்­கள் என்­கிற நிலைப்­பாடே தோன்­றி­யி­ருக்­கி­றது என்று கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.
இந்த நிலை­யி­லேயே மதத் தலை­வர்­கள் தலை­யிட்டு பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண முயற்ச எடுத்­துள்­ள­னர் என்று அறிய முடி­கின்­றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila