மீண்டும் கூட்டமைப்பில் இணையும் சாத்தியம் இல்லை! - சிவசக்தி ஆனந்தன்



தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் மீண்­டும் இணை­வ­தற்கு எந்­தச் சாத்­தி­ய­மும் இல்லை என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்­தன்  திட்­ட­வட்­ட­மாக தெரிவித்துள்ளார்.  “ நாம் நான்கு கட்­சி­கள் இணைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில்­தான் இருந்­தோம். தமிழ் அர­சுக் கட்­சி­யில் இருக்­க­வில்லை. அந்­தக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யிட்­டி­ருந்­தோமே தவிர, அந்­தக் கட்­சி­யில் இணை­ய­வில்லை.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் மீண்­டும் இணை­வ­தற்கு எந்­தச் சாத்­தி­ய­மும் இல்லை என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்­தன் திட்­ட­வட்­ட­மாக தெரிவித்துள்ளார். “ நாம் நான்கு கட்­சி­கள் இணைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில்­தான் இருந்­தோம். தமிழ் அர­சுக் கட்­சி­யில் இருக்­க­வில்லை. அந்­தக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யிட்­டி­ருந்­தோமே தவிர, அந்­தக் கட்­சி­யில் இணை­ய­வில்லை.
நான் நாடா­ளு­மன்­றத்­தில் பேசு­வ­தற்கு நேரம் கோரி­ய­போது, கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் பேசித்­தான் முடி­வெ­டுக்க முடி­யும் என்று இரா.சம்­பந்­த­னின் இணைப்­புச் செய­லர் தெரி­வித்­தார்.எமது கட்­சிக்கு நீண்ட வர­லாறு உள்­ளது. நான் 4 தட­வை­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­டேன். எனக்கு நேரம் ஒதுக்­கா­மல் விடு­வது என்­பது வன்னி மக்­க­ளின் குரல்­வ­ளையை நெரிப்­ப­தற்­குச் சம­னா­னது.
கூட்­ட­மைப்­பில் இருக்­கின்ற அனைத்­துக் கட்­சி­க­ளும் தங்­க­ளின் சுயா­தீன தன்­மையை பேணிக் கொள்­ள­லாம் என்று இரா.சம்­பந்­தன் அடிக்­கடி கூறு­ப­வர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் அறிக்­கை­யில் கூறப்­பட்ட விட­யங்­க­ளி­லி­ருந்து இவர்­கள் வில­கிப் போய்­விட்­டார்­கள்.
இந்த நிலை­யில் இவர்­க­ளு­டன் நாம் சேரு­வது சாத்­தி­யமே இல்­லா­தது. நாடா­ளு­மன்­றத்­தில் ஒவ்­வொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கும் தனித் தனி­யாக நேரம் ஒதுக்­கு­வ­தில்லை. கட்­சி­க­ளுக்­குத்­தான் நேரம் ஒதுக்­கப்­ப­டும். இவர்­கள் எனக்கு நேரம் தர­வில்லை என்­றா­லும், எனக்­குப் பேசு­வ­தற்கு நேரம் எடுப்­பது எப்­படி என்­பது தெரி­யும்.
நான் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கான சிறப்­பு­ரி­மை­யைப் பயன்­ப­டுத்­து­வேன். அனை­வ­ருக்­கும் சம­னான நேரத்தை ஒதுக்க வேண்­டிய பொறுப்பு சபா­நா­ய­க­ருக்­கு­ரி­யது. அவ­ரி­டம் நான் முறை­யிட்­டுள்­ளேன் என்­றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila