"மக்களுக்கு தண்ணீர் எங்களுக்குக் கண்ணீர்"

சம்பள அதிகரிப்புக் கோரி இன்று காலை 10.30 மணியளவில் தேசிய நீர் வழ ங்கல் சபை அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த வவுனியா நீர் வழ ங்கல் சபை ஊழியர்கள் 25% சம்பள அதிகரிப்பு தமக்கு வழங்குமாறு கோரி கவ னயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். 
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "சம்பள அதிகரிப்பை 25 வீதத்தால் உயர்த்து", "மக்களுக்கு தண்ணீர் எங்களுக்குக் கண்ணீர்", "ஏமாற்றாதே ஏமாற்றாதே", "2015 இல் தரவேண்டியதை 2018 இல் ஆவது தா..", போன்ற வாசகங்களைத் தாங்கி யவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இது வரை காலமும் 30% சம்பள அதிகரிப்பு தருவதாக இருந்தது இம்முறை 25% சம்பள அதிகரிப்பினை வழங்குமாறு கோரியிருந்தோம்.

அந்த 25 வீதமான சம்பள அதிகரிப்பினை வழங்காமல் இந்த அரசாங்கம் இழு த்தடிப்புச் செய்து வருகின்றது. இந்த 25% சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila