புலிகள் உயிர் சிந்தி பிடித்த ஆனையிறவை இரா ணுவத்தினரிடம் கொடுக்குமாறு நான் எப்போதும் கூறவில்லை என பல ஆண்டுகளாக அவர்மீது சுமத் தப்பட்டு வந்த குற்றச்சா
ட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தர ணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி யின் முதலாம் ஆண்டு நினைவு தினமும் நினைவுப் பேருரையும் சாவகச்சேரியில் நேற்று நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தென்மரா ட்சி கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையி லையே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக் கையில்,
விநாயகமூர்த்தியும் நானும் நீண்ட கால மாக ஒன்றாக இணைந்து பயணித்திருக்கின் றோம். அவருக்கும் எனக்கும் இடையில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அதில் எங்களுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவம் குறி த்து நான் இந்த இடத்தில் தெரிவிக்க விரு ம்புகிறேன்.
அதாவது இலங்கை இராணுவம் கடந்த 1990 ஆம் ஆண்டு இருந்ததைப் போன்று மீண்டும் முகாம்களுக்கு செல்ல வேண்டு மென அரசாங்கத்தை கோருவதற்கு தமிழ்த் தரப்புக்கள் தீர்மானிக்கின்றன. இதனை அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எனக்கு அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரி வித்த போது என் மனதில் வஞ்சகம் ஏதுமில் லாமல் அவ்வாறு நாம் கோரினால் அரச தர ப்பினர் ஆனையிறவை தம்மிடமே மீள தர வேண்டுமெனக் கேட்கலாம் என்று நான் கூறியிருந்தேன். அப்போது எனக்கருகில் இரா.சம்பந்தனும், விநாயகமூர்த்தியுமே இருந்தனர்.
அவ்வாறு நான் கூறிய கருத்து கொழு ம்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம் என சுழ ன்று வந்து திரிவுபடுத்தப்பட்டு ஆனந்த சங் கரி ஆனையிறவை அரச படைகளிடம் புலி கள் ஒப்படைக்க வேண்டுமெனக் கோருவ தாக செய்திகள் பரவி யிருந்தது. ஆனால் அந்தக் கருத்தை நான் சொல்லவில்லை என் பதுடன் அப்போதைய அரச தரப்பினர்களிடம் ஆனையிறவை நீங்கள் இனி புலிகளிடமி ருந்து பிடிப்பதென்பது பகல் கனவு என்றும் அதனை எந்தக் காலத்திலும். நீங்கள் பிடிக்க முடியாதென்றுமே குறிப்பிட்டிருந்தேன். அத் தோடு இனத்திற்காகவும் மண்ணுக்காகவும் எத்தனையோ இழப்புக்களையும் தியாகங்க ளையும் புலிகள் செய்திருந்ததையும் குறிப் பிட்டிருந்தேன்.
இவ்வாறான கருத்துக்களை தெரிவித்த நான் ஆனையிறவை கொடுக்க சொல்லி கேட்டிருப்பனோ? என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். இருந்தும் நான் ஆனை யிறவை கொடுக்க வேண்டுமெனக் கோரிய தான செய்திகள் பரவி என்மீதான விமர்சன ங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் தன்னாலேயே இவ்வாறானதொரு நிலைமை வந்துவிட்டதாக கருதிய விநாயக மூர்த்தி என்னிடம் பேசுவதற்கு பலதடவை கள் முயற்சித்து ஒருதடவை என்னிடம் பேசி யும் இருந்தார்.
அதன்போது தான் இவ்வாறு எந்தக் கரு த்தையும் எவருக்கும் சொல்லவில்லை என்று என்னிடம் கூறிய போது அதனை நானும் ஏற்றுக் கொண்டு அதனை நீங்கள் கூறவி ல்லை என்றும் எவ்வாறு அது திரிபுபடுத்தப் பட்டது என்று எனக்குத் தெரியும் என்றும் நான் விநாயகமூர்த்தியிடம் கூறியிருந்தேன்.
இவ்வாறானதொரு நிலையில் தம்பி பிர பாகரனுக்கும் இந்த விடயம் தெரிய வந்த போதும் அவரும் இதனை இலகுவில் நம்ப வில்லை. அவ்வாறு அவர் எந்தச் சம்பவம் என்றாலும் அதனை ஆராய்ந்தே முடிவு களை எடுக்கின்ற பண்பு அவரிடம் இருந்தது. அவ்வாறு அவருக்கு இருக்கின்ற பண்பு களோ பெருந்தன் மைகளோ இன்றிரு க்க கூடிய எந்தவொரு அரசியல் தலைமை களுக்கும் கிடையாது.
ஆனாலும் அன்று முதல் மலை உச்சி யிலிருந்து உருட்டி விடப்பட்ட நான் இன்று வரைக்கும் எழுந்திருக்கவே இல்லை. அத ற்கு விநாயகமூர்த்தி தான் காரணமென பல ரும் நினைத்தனர். ஆனால் உண்மையில் அவர் காரணமல்ல.
எவர் அதனை இவ்வாறு சொன்னவர் யார் என்று எனக்கு தெரியும். அதன் விளைவு தான் இன்று நடக்கிறது என்றார். இதேவேளை தமிழ்க் கட்சிகள் பலவும் இன்றைக்கு தேசி யம் பேசுகின்றன. அதில் தேசியம் பேசுகின்ற அல்லது அந்த கொள்கையுடன் பயணிக்கி ன்ற கட்சிகள் எவை என்பதையும் பார்க்க வேண்டும். இன்றைக்கு கூட்டமைப்பில் இரு க்கின்ற ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் அரசுடன் இருந்த அரச கட்சிகளாகவே பார்க் கப்பட்டன. அவர்களுடன் இன்று பலரும் தேசியம் பேசுகின்றவர்களாக இருக்கின்றனர்.
இதற்கு மேலதிகமாக தற்போதும் தேசி யம் பேசுகின்ற கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பியு டனேயே ஒன்றாக சேர்ந்து செயற்படும் நிலைக்கு வந்துள்ளீர்கள்.ஆக இப்ப என்றா லும் உங்களுக்கு கொஞ்சமாவது தேசியம் இருக்கிறதா என்று எண்ண வேண்டும். ஈ.பி.டி.பியுடனே சேர்ந்து செயற்படும் கூட்ட மைப்பினரின் தேசியம் என்ற கொள்கை, கௌரவம் எல்லாம் எங்கே சென்று விட்டது. தமிழ்த் தேசியத்திற்காக உயிரிழந்த பொன் னம்பலம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் கட்டிக்காத்து வளர்த்த கௌரவம் எங்கே? இதுவா இன்று நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் கௌரவம்? என் றும் கேள்வி எழுப்பினார்.
ஆகவே தற்போது எல்லோரையும் ஏமா ற்றி வருகின்ற நீங்கள் எல்லோரையும் மீண்டும் கண்ணீர் விட்டு அழும் நிலைக்கு கொண்டு செல்லாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நான் கூறுவது எல் லாம் என்னுடைய வேதனையல்ல.அவை ஒவ்வொன்றும் இந்த மக்களின் வேதனை கள் தான்.
மேலும் எமது இளைய தலைமுறையி னர் வரலாறுகளையும் உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக செயற்பட முன்வந்த வர்கள் பணம் சேர் ப்பதும் பட்டம் பதவி களைப் பெறுவதை யுமே நோக்கமாகக் கொண்டிருக்காது மக் களுக்காக நீதியாக வும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும் என ஆனந்தசங்கரி ;தெரிவித்தார்.