அடுத்த முதலமைச்சர் விக்கியே! செல்வம் ஊடாக தூதுவிட்ட சம்பந்தன்!

வடமாகாணசபையின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில் கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் பதில்களுமாக தமிழரசுக்கட்சிக்குள் பரவலாக இடம்பெற்றபோதும் மாவை தானே போட்டியிட உள்ளதாக கருத்து தெரிவித்து வந்திருந்த நிலையில் சம்பந்தன் வழமை போலவே தனது மாஸ்ரர் பிளாளை போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ரொலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தருக்காக தூதுசென்று விக்கினேஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அதற்கு விக்கினேஸ்வரன் சாதகமான பதில் எதனையும் தெரிவிக்கவில்லை என்றும் தமிழ்கிங்டொத்திற்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அடுத்தவாரம் விக்கினேஸ்வரனின் நூல் வெளியீட்டிற்காக யாழ்ப்பாணம் வரும் சம்பந்தன் விக்கினேஸ்வரனுடன் நேரில் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதற்கு சுமந்திரனோ அல்லது தமிழரசு கட்சி தலைவர் மாவையோ உடன்படுவார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செல்வம் அடைக்கலநாதனை அனுப்பிய சம்பந்தன் அதனோடு நிறுத்தாமல் இந்திய மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஊடாகவும் விக்கினேஸ்வரனை இத்திட்டத்திற்கு சம்மதிக்க வைத்து கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளையும் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவான வாக்குகளையும் கூட்டமைப்புக்குள்ளேயே வைத்திருக்கும் சாணக்கிய திட்டமே இதுவென்பதையும் அறியக்கூடியதாக உள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila