![]()
மன்னார் 'சதொச' வளாக மனிதப் புதைகுழியில் இருந்து, கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
|
மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் தலைமையில் மன்னார் 'சதொச' வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் படுத்தப்படும் மனித எலும்பக்கூடுகள் அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்றது.
இன்று மீண்டும் 72 ஆவது தடவையாக அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த அகழ்வு பணியின் போது கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய மனித எலும்புக்கூடு ஒன்று அடையாளப் படுத்தப்பட்டிருந்தது. குறித்த மனித எலும்புக்கூடு அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய அகழ்வு பணியின் போதும் அதே போன்று கைகள் கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய மூன்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
![]() ![]() ![]() ![]() |
மன்னார் புதைகுழியில் தொடரும் அகழ்வு - அதிர்ச்சியை ஏற்படுத்தும் எலும்புக்கூடுகள்!
Related Post:
Add Comments