தொடரை 3-1 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் இழந்த போதும் வெற்றியை அடுத்து இலங்கை அணி ஒரு பாடலை அதன் கிரிக்கட் கீதமாக அறிமுகப்படுத்தியது.
இலங்கை அணி வெற்றிபெறும் போதெல்லாம் இந்தப்பாடலைப்பாடவுள்ளதாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் ஆரம்பவீரர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஆரம்பத்தில் உரையாற்றியதை அடுத்து இந்தப்பாடலைப்பாடியிருந்தனர்.
இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
Idea that #Sinhala is a synonym for #SriLankan is deep, widely held. But when national team adopts in verse, problem reaches a new low. #lka https://t.co/emubqhZ7qZ— Sarinda Perera (@sarindaperera) October 24, 2018
சிங்கள இரத்தம் ஆகாயம் முழுவதிலும் என அதில் ஒரு வரி இடம்பெற்றுள்ளது. இந்தவரி தொடர்பிலேயே கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
And another example why I have not and never will support them. https://t.co/BCVIsq92G3— Mathuri (@Madi2585) October 24, 2018
இது போன்ற காரணங்களால் தான் இலங்கை கிரிக்கட் அணிக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதில்லை என மனித உரிமை சட்டத்தரணி மாதுரி தமிழ்மாறன் தனது டுவிட்டர் பதிவில் குறிபப்பிட்டுள்ளார்.