![]()
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரும் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்கவின் பெயரையும் கொள்கைகளையும் விற்று உண்ணும் திருடர்களும் கொலைகாரர்களும் நாட்டில் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
|
அவர்கள் இப்போதும் பண்டாரநாயக்கவின் பெயரையும் கொள்கைகளையும் ஏன் விற்று உண்கிறார்கள் என்று தெரியவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறுவுனரும் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்கவின் 120ஆவது பிறந்த தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துககொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று காலை காலி முகத்திடலில் பண்டாரநாயக்கவின் நினைவுத் தூபிக்கு மலர் செண்டு வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் இடையில் எவ்வித உரையாடல்களும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
|
பண்டாவின் கொள்கைகளை விற்றுத் தின்னும் கொலைகாரர்கள் - சந்திரிகா சீற்றம்!
Related Post:
Add Comments