
அதனடிப்படையில்,
அரசியல் கைதிகளை விடுதலை செய் !
நில அபகரிப்பை நிறுத்து!
காணாமல் ஆக்கப்பட்டோர் விபரங்கள் எங்கே?
மலையக மக்களின் அடிப்படை ஊதியத்தை 1000 ரூபாவாக உயர்த்து!
மன்னார் புதைகுழி -நீதி எங்கே?
தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி !
போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலுள்ள அனைத்து தமிழ் மக்களையும் இவ்வுரிமை போராட்டதிற்கு ஒத்துழைப்பு நல்கும் வண்ணம் வேண்டிக்கொள்ளப்படுகிறது.
